சவுந்தர்யா கையில் ரஜினி டாட்டூ
சென்னை: ரஜினி மகள் சவுந்தர்யா தனது தாய்&தந்தை பெயரை பச்சை குத்திக்கொண்டார்.நடிகர், நடிகைகள் தங்களுக்கு பிடித்தவர்கள் பெயரை டாட்டூ (பச்சை) குத்திக்கொள்வது பேஷன். திரிஷா, நயன்தாரா, டாப்ஸி, எமி ஜாக்சன் போன்ற கோலிவுட் நடிகைகளும், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் போன்ற பாலிவுட் நடிகைகளும் பச்சை குத்திக்கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் நடிகை அல்லாத ஒருவர் இடம்பிடித்திருக்கிறார். ‘கோச்சடையான் படத்தை இயக்கிய ரஜினியின் மகள் சவுந்தர்யாதான் அவர். தனது இடது முழங்கையில் லதா ரஜினி என தனது தாய் மற்றும் தந்தையின் பெயரை பச்சை குத்தி இருக்கிறார். இப்படத்தை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் சவுந்தர்யா இதுபற்றி கூறும்போது,‘என் பெற்றோர் மீது என்றுமே எனது அன்பு குறையாது. என் வாழ்நாள் முழுவதும் என் கையில் இந்த அழியாத சின்னம் (பச்சை குத்திய பெற்றோர் பெயர்) இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.