வாஷிங்டன்ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை அடுத்துள்ள ஹிராத் நகரில் இந்திய தூதரகம் உள்ளது. இங்கு கடந்த மாதம் 23ம் தேதி திடீரென 4 தீவிரவாதிகள் வந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். இதில், தூதரக அலுவலகத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்திய பாதுகாப்பு படையினரும், ஆப்கன் ராணுவத்தினரும் எதிர் தாக்குதல் நடத்தி, 4 தீவிரவாதிகளையும் சுட்டு கொன்றனர். இந்தியாவில் கடந்த மாதம் 26ம் தேதி நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றார். முன்னதாக, பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான், ஆப்க£னிஸ்தான் உட்பட சார்க் மாநாட்டு தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள், ஆப்க£னிஸ்தானில் ஹிராத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தாக்கியதாக தெரிய வந்தது.
இந்நிலையில், இந்த தாக்குதலை நடத்தியது, பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஸ்கர்&இ&தொய்பா தீவிரவாதிகள் என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. பல்வேறு வெடிகுண்டு தாக்குதல்கள் மூலம் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் இந்த இயக்கத்தின் மீதும், அதன் தலைவர்களுக்கு எதிராகவும் மேலும் தடைகள் விதிக்கப்படுகின்றன என்று அமெரிக்க வெளியுறவு துறை அறிவித்துள்ளது. கடந்த 2001&ம் ஆண்டு உருவான லஸ்கர் தீவிரவாத இயக்கம், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உட்பட வெவ்வேறு நாடுகளில் ஊடுருவி, வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது. 2008&ம் ஆண்டு மும்பையில், அந்த இயக்க தீவிரவாதிகளின் தாக்குதலில் 166 பேர் பலியானார்கள். கடந்த 2011&12ல் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு தாக்குதல்களுக்கும் அவர்களே காரணம் என்றும் அமெரிக்க வெளியுறவு துறை குறிப்பிட்டுள்ளது.