இரண்டு கதாபாத்திரங்களை வைத்து இருவர் மட்டும் (பை 2) என்ற படம் வந்தது. தெலுங்கில் எஸ்பிபி, லட்சுமி ஆகிய இருவர் மட்டுமே நடித்த மிதுனம் படம் வெளியானது. தற்போது ஒருவர் மட்டுமே நடிக்கும் படம் என் உயிர் என் கையில். இதுபற்றி இயக்குனர் ராகுல் சிங் கெஜ்வால் கூறும்போது, இளைஞர் ஒருவரை 3க்கு 3 அகலமுள்ள பெட்டிக்குள் அடைத்து புதைக்கிறார்கள். அதிலிருந்து வெளிவர இளைஞர் போராடும் காட்சிகள்தான் கதை. ஜெய் ஆகாஷ் நடித்திருக்கிறார். ஏகேஎன் செபாஸ்டின் ஒளிப்பதிவு. நேஹா தியாகி தயாரிப்பு. 6 மொழிகளில் இப்படம் உருவாகிறது என்றார்.