அரசியலுக்கு இழுக்கும் முயற்சியால் மம்மூட்டி கோபம்
சென்னை:மம்மூட்டியை அரசியலுக்கு இழுக்க முயல்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சமீபகாலமாக இணையதள பக்கங்களில் மம்மூட்டியின் பெயரையும். படத்தையும் வெளியிட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போவதாக குறிப் பிட்டிருப்பதுடன், அக்கட்சி சார்பில் வரும் எம்.பி. தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் நிற்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. தெலுங்கில் சிரஞ்சீவி, கன்னடத்தில் அம்பரிஷ் போன்றவர்கள் அரசியலில் குதித்து பதவிக்கு வந்திருப்பதையடுத்து மம்மூட்டியையும் அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் அழைக்கின்றனர்.
இதுபற்றி மம்மூட்டியிடம் கேட்டபோது கோபப்பட்டார். அவர் கூறும்போது, ‘நான் நாடாளுமன்ற தேர்தலில் நிற்கப்போவதாகவும், கட்சியில் சேரப்போவதாகவும் இணைய தளங்களில் தகவல்கள் வெளியாகின்றன. அதுபற்றி தெளிவாக எனது எல்லா நண்பர்களுக்கும் தெரிவிக்கிறேன். அரசியலில் குதித்து தேர்தலில் நிற்கப்போவதாக வரும் தகவல்கள் தவறானவை என்றார்.