Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2012
04
Dec
நாய் கடித்து இறந்த குட்டியை தூக்கிக் கொண்டு சுற்றும் குரங்கு : 3 நாளாக பட்டினி


பெரம்பலூர்: நாய் கடித்து இறந்துபோன தனது குட்டியை 3 நாட்களாக தூக்கி கொண்டு சாப்பிடாமல் அழுதபடி பாசப்போராட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது தாய் குரங்கு. பெரம்பலூர் மாவட்டம் வேலூர் அருகே உள்ளது ரங்கநாதபுரம் கிராமம். இங்கு ஒரு பெண் குரங்கு, தனது குட்டியுடன் சமீபகாலமாக சுற்றி கொண்டிருந்தது. 3 நாட்களுக்கு முன்பு குட்டிக்குரங்கு தெருவில் விளையாடியபோது, தெரு நாய் ஒன்று அதை கடித்துள்ளது. இதைப்பார்த்த தாய் குரங்கு ஓடிச் சென்று நாயை விரட்டி, குட்டியை மீட்டது. காயம்பட்டு வலியால் துடித்த அந்த குட்டியை பார்த்து தாய் குரங்கு துடித்தது. அந்த குட்டியை தோளில் போட்டு சமாதானப்படுத்தியது.

ஆனால் காயமடைந்த அந்த குட்டி சிறிது நேரத்தில் இறந்து போனது. அசைவற்று இருந்த குட்டியை பார்த்து தாய் குரங்கு கண்ணீர் வடித்தது. ஆனாலும் தனது பாச குட்டியை கீழே போட்டுவிட்டு செல்ல மனமில்லாமல், அதை கடந்த 3 நாட்களாக தூக்கியபடி சுற்றுகிறது தாய் குரங்கு. மனமுடைந்த நிலையில் சுற்றும் அந்த தாய் குரங்கு, குட்டிக்கு முத்தம் கொடுக்கிறது. கண்ணீர் சிந்துகிறது. குட்டியின் உடல் மீது அமரும் ஈக்களையும், கொசுக்களையும் கையால் விரட்டிவிடுகிறது. இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் பரிதாபப்பட்டு வாழைப்பழம், பிஸ்கட் வாங்கி கொடுத்தாலும் அதை வாங்க மறுத்து, எதையும் சாப்பிடாமல் குட்டியுடன் தொடர்ந்து கத்தியபடியே ஓடுகிறது. குரங்கின் பாசப் போராட்டத்தை பார்த்து ரங்கநாதபுரம் கிராம மக்கள் மனம் உருகுகின்றனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
vijay - MUMBAI
12/4/2025 -- 14:10:54

இந்த பாசம் மனிதர்களிடேயே குறைந்து வருகிறது. இது போன்ற செய்திகளை கேட்டு அறிந்து மனிதர்கள் மனிதர்களை வாழ முயற்சிட்க வேண்டும்

Ram - chennai
12/4/2025 -- 14:16:45

கடவுள் யார்க்கும் வேதனியே கொடுகதிர்கள்

vjps - chennai
12/4/2025 -- 14:29:49

monkeyiku இருக்கற பaசம்குட மனுசனுக் இல்ல

deepak - palladam
12/4/2025 -- 15:59:24

ஐந்து அறிவு கொரங்குக்கு இருக்குற பாசம்... ஆறு அறிவு மனிதனுக்கு இல்லை இந்த காலத்துல

vijay - chennai
12/4/2025 -- 16:4:15

மனிதன் போல இல்ல .. யாரவது உதவி புரயுக்கள்

vijay - chennai
12/4/2025 -- 16:53:27

அன்னை இன் பாசம் மற்றும் அன்பை எதை கொண்டும் ஈடு செய்ய முடியாது ப்ளீஸ் இதை பார்த்தாவது பிள்ளைகள் அம்மா அப்பாவை நன்றாக கவனித்து கொள்ளவேண்டும்

priya - chennai
12/4/2025 -- 17:16:29

மனதிற்கு கஷ்டமா இருக்கு

girish - kovai
12/4/2025 -- 17:26:33

பாவம் அந்த குரங்கு. செய்வதறியாமல் திண்டாடுகின்றது. மீளாத்துயரில் சிக்கிக்கொண்டது அக்குரங்கு. விதி விளையாடிவிட்டது. அக்குரங்கின் மனம் சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.

aappu - sunnee
12/4/2025 -- 17:45:20

மனிதனாகப்பிறந்த மனிதன் மிருகங்களாக வெட்டிக்கொண்டும் ,அடித்துக்கொண்டும் சாகிறான்....... .மனித வடிவில் மிருகங்கள்............

ravi - riyadh
12/4/2025 -- 19:43:14

பாசமற்று போன மானிடர்கள் மத்தியில் இந்த குரங்கு மிக நன்றி உம் பாசமும் உள்ள ஜீவன்

T.Gulzar Ahmed - AMBUR
12/4/2025 -- 23:46:51

தாய் பாசம் , மனிதர்களுக்கு மட்டுமில்லை ,விளக்குகளுக்கும் உண்டு என்பதை தான் அந்த {ஆதி மனிதன் }குறைக்கு நிருபித்துள்ளது

krishna - perambalur
12/5/2025 -- 8:1:50

விலங்குகளுக்கு இருக்கும் பாசம் மனிதர்களுக்கு இல்லை போலும்

jeni - coimbatore
12/5/2025 -- 10:18:16

தாய்மையின் அன்பு நிகரற்றது

G Venkataraman - chennai
12/5/2025 -- 11:20:10

மிகவும் கஷ்டமாக இருக்கிறது இறந்த குட்டி ஆத்மா அமைதி பெற வேண்டுகிரன் தாய குரங்கு ஆறுதல் கஊருகிறேன்

M.THIRUGANAM - MALAYSIA
12/19/2012 -- 22:1:40

குரங்கும் மனிதனை போலதான் பாவம்!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement