| |||||
|
2012
09
Sep சென்னை: டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.5 உயர்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.720 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். தமிழகத்தில் மதுக்கடைகளை டாஸ்மாக் நிறுவனம் நடத்தி வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி கிடைக்கிறது. மாநிலத்தில் 6,820 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள், மது பாட்டில்களில் ஒட்டப்பட்டுள்ள அதிகப்பட்ச சில்லறை விற்பனை விலையை காட்டிலும் அதிக விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதிக விலை விற்பவர்கள் மீது அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும், அதிக விலைக்கு விற்பதை நிர்வாகத்தால் தடுக்க முடியவில்லை. மது பாட்டில்களின் விலை ரூ.65, ரூ.75, ரூ.85 என இப்போதுள்ளது. இதனால் மது வாங்குபவர்களுக்கு சில்லறை பிரச்னையில் 5 ரூபாய் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண எல்லா டாஸ்மாக் கடைகளிலும் 2 மாதத்துக்குள் பில்லிங் மிஷின் வழங்கப்பட உள்ளது. பில்லிங் மிஷின் நடைமுறைக்கு வரும் போது, மது பாட்டில்களின் விலைகளை, ரூ.70, ரூ.80, ரூ.90 என மாற்றி அமைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் குடிமகன்களுக்கு விற்பனையாளர்கள் சில்லறை வழங்க பிரச்னை இருக்காது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
yuvaraj - chennai
9/9/2025 -- 21:15:11 போங்கடா நீங்களும் உங்க ஆட்சியையும் திருத்தவே முடியாது. எல்லாரும் குடிச்சி நாசமா போறதுல என்ன ஒரு சந்தோசம் V. Thirugnanam - Thiruvallur
9/10/2025 -- 9:16:44 மது விற்பனையில் இத்தனை அக்கறை செலுத்தும் அரசு, தனியார் பள்ளிக் கட்டணங்களை பற்றி கவலைபடாமலும் அல்லது கண்டுகொள்ளாமலும் இருப்பதில் என்ன நியாயம்? கல்வியா அல்லது மதுவா கடவுளுக்கு தான் வெளிசம் . Thirunavukkarasu - Thanjavur
9/10/2025 -- 10:48:1 1000 அனாலும் நாங்கள் குடித்துகொண்டே இருப்போம் manikandan - tirupur
9/10/2025 -- 10:55:43 no eat hot drinks this spoiled in our health KUDIMAGAN - CHENNAI
9/10/2025 -- 11:7:12 நாட்டில் எவளு பிரச்சனைகள் உள்ளன ஆனால் இந்த அரசு டாஸ்மாக் முகியதவும் கொடுப்பது மிக வேதனையக்ஹா உள்ளது நாட்டில் பசி பட்டினி கொள்ளை கற்பழிப்பு ஊழல் எவளு இருக்கு டாஸ்மாக் கடை ரொம்ப முக்கியம் முதலமிச்சர் வரும்போது எதோ ஒரு பொய் சொல்லி வருகிறார்கள் ஆனால் யாரு வந்தாலும் அநியாயம் தொடர்டுகொண்டே இருக்கு இது எல்லாம் விட்டுட்டு எதனை கோடி வருமானம் என்று கணக்கு போடுகிறர்கள் வாழ்க தமிழ்நாடு வளர்க குடிமகன்கள் benny - aden
9/10/2025 -- 11:21:51 நல்ல வருவீக நல்ல ஆட்சி சய்வீக sivakumar - thiruvallur
9/10/2025 -- 11:34:29 5 ரூபாய்க்கு பதில் 10 ருபாய் கொள்ளை அடிக்கபோறான் governmentukku 720 கோடி லாபம் விக்கிரவனுக்கு 1440 கோடி லாபம் பாவம் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கிற ஏழைக்கு 2160 கோடி நஷ்ட்டம் ??? Elanchezhian - chennai
9/10/2025 -- 13:1:22 அக்டோபர் இரண்டு டாஸ்மார்க் ஷாப் மூடப்படும் என்று தொலைகாட்சில அறிவிபுபு. ஆனால் வருடர்திற்கு 720 கோடி லாபம். கடவுளே வுன்மையே பேசுங்கப்பா.மேடம்............
|
|