| |||||
|
2012
02
Sep ![]() சூளகிரி :எட்டு வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். சிறுவனின் அண்ணியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கள்ளக்காதல் ஜோடியை நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பா (50). இவரது மனைவி மாதம்மாள் (45). இவர்களது மூத்தமகன் சங்கர் (25). மருமகள் கலா (24). வீட்டின் பின்புறம் வசித்து வருகின்றனர். திம்மராயப்பாவின் கடைசி மகன் சதீஷ் (8). அங்குள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்தான். நேற்று பள்ளிவிடுமுறை என்பதால் வீட்டின் பின்புறம் சதீஷ் விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில் மாலை 6 மணியை தாண்டியும் மகன் வீட்டுக்கு வராததால் மாதம்மாள் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில் அருகில் உள்ள தோட்டத்தில் சாக்கு மூட்டை ஒன்றில் இருந்து ரத்தம் வழிந்ததை பார்த்த அப்பகுதியினர், மூட்டையைப் பிரித்து பார்த்தனர். அதில் சதீஷ் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவனது தலையின் பின்புறம் பலத்த வெட்டுக்காயம் இருந்தது. தகவல் அறிந்து வந்த பெற்றோர் சிறுவனின் உடலைப் பார்த்து கதறினர். தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. உடல் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த நாய், சங்கர் வீட்டின் முன் சுற்றி வந்து குரைத்தது. பின்னர் வீட்டின் முன் படுத்துக்கொண்டது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கிருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
parthiban - chennai
9/2/2025 -- 13:16:56 எல்லாத்துக்கும் காரணம் பெண்களே rajesh - salem
9/3/2025 -- 8:0:52 இது போன்ற அவலங்கள் கிராமங்களிலும் தொடர் கிறதே என்று மிகவும் வருத்தமாக உள்ளது . Nenapillai - U.A.E
9/3/2025 -- 12:17:53 அரபுனாட்டின் சட்டம் தண்டனை போல் இந்தியாவிலும் சட்டம் தண்டனை இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும் மனித மிருகங்களின் அட்டகாசமும் இல்லாது போகும் S.YEGNA RAMAN - TUTICORIN
9/3/2025 -- 12:45:26 இந்த மாதிரி நாய் எல்லாம் தூக்குல போடணும் லோகு - கரூர்
9/20/2012 -- 6:59:17 உடல் பசிக்கு உயிர் எடுத்த உத்தமிக்கு ஊருக்கு நடுவே தூக்கு தூத்திரிநாயே
|
|