சென்னை :பல ஆண்களை ஏமாற்றி மோசடி செய்த சஹானா சுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள தோழி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்தவர் சஹானாஸ் (30). இவர் மீது கடந்த சில தினங்களுக்கு முன் போரூர் மணிகண்டன் (25), புளியந்தோப்பு பிரசன்னா (28) ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தனர். அதில், “எங்கள் இருவரையும் சஹானாஸ் திருமணம் செய்து மோசடி செய்து விட்டு நகை, பணத்தை அபகரித்து சென்று விட்டார். ஐஏஎஸ் படிக்க போகிறேன் என்று கூறி பெண்கள் விடுதியில் தங்கியவர் எங்களைப்போல் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடமிருந்தும் நகை, பணத்தை மோசடி செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறி இருந்தனர். இதையடுத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். 6 மாத கர்ப்பமாக இருக்கும் அவர், தனது நிலை குறித்து சென்னை புறநகரில் உள்ள தோழி ஒருவரிடம் கூறி கதறி உள்ளார். அவர் தனது கணவரிடம் கூறி சஹானாஸை தன்னுடன் தங்க வைத்துள்ளார். எனவே, சஹானாசுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பாக வைத்துள்ள தோழி யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சஹானாஸ் சென்னையில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்யும் போது, அவரை ரகசிய கண்காணிப்பு கேமரா மூலம் ஆபாசமாக படம் பிடித்து மிரட்டிய சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர் கடையில் வேலை செய்து வரும் 25 பெண்களையும் இதே போன்று ஆபாசமாக படம் பிடித்து வைத்து மிரட்டுவதாக கூறப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
இந்த மாதிரி ஆட்களால் இந்தியரின் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை தப்பாக பேசுகிறார்கள் ,,, இம்மாதிரியான பெண்களால் கண்ணகி போன்று வாழும் பெண்களுக்கு கேவலம் உண்டாகிறது