| |||||
|
2012
07
Aug ![]() திருச்சி: இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கில் வங்கி அதிகாரிக்கு 10 வருட சிறை தண்டனையும், ரூ.1.15லட்சம் அபராதமும் விதித்து திருச்சி மகளிர் கோர்ட் உத்தரவிட்டது. திருச்சி திருவெறும்பூர் வடக்கு காட்டூரை சேர்ந்தவர் அருண் பிரசாத் (30). தில்லைநகரில் உள்ள தனியார் வங்கியின் அதிகாரி. இவருடன் அதே வங்கியில் உறையூரை சேர்ந்த பாத்திமா (29) பணியாற்றினார். இருவரும் 2006 முதல் காதலித்தனர். இதில் பாத்திமா கர்ப்பமடைந்தார். சில வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி, 2007 ஜூலை 2ம் தேதி தில்லை நகரில் உள்ள மருத்துவமனையில் பாத்திமாவுக்கு, கருகலைப்பு செய்தார். இந்நிலையில் சில மாதங்களில் அருண்பிரசாத் ஈரோட்டுக்கும், பாத்திமா தேனிக்கும் மாற்றப்பட்டனர். இந்நிலையில் அருண்பிரசாத், அங்கு வேலை பார்க்கும் தனலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த பாத்திமா அருண்பிரசாத்திடம் கேட்டபோது, உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
thanaraj - chennai
8/7/2025 -- 18:1:30 மீண்டும் ஜெ,ஆட்சியல் எலி கரி திண்ணனும்போலே....மழையா காணாம்.தினமும் விலை வாசி உயர்வு,கொள்ளை, கொலை,AML அட்டுழியம், வேலை வாய்ப்பில் முறைகேடு, John - Trichy
8/8/2025 -- 8:16:7 ஹ ஹ ஹ இது பாத்திமா ஓடே தப்புலே அவேலுக்கு என்னே தண்டனை சொல்லேவே இல்லே ???? ansari - thiruvarur
8/8/2025 -- 10:34:51 இது போன்ற செய்திகளை உலகம் அறிவதற்கு மறைக்காமல் அணைத்து உண்மைகளையும் முழுமையாக வெளியிடவும்.. அப்பொழுதுதான் மக்கள் அனைவர்க்கும் உண்மையான நிலவரம் புரியும் lakshmi - ttp
8/8/2025 -- 10:35:25 வெரி குட்.நல்ல முடிவு .
|
|