ஊட்டி :ஊட்டியில் மார்ச் முதல் மே வரை கோடை சீசன். செப்டம்பர் முதல் நவம்பர் வரை 2வது சீசன். 2வது சீசனுக்கு வெளிநாடு, வெளி மாநில சுற்றுலா பயணிகள் மற்றும் தேனிலவு தம்பதிகள் அதிகளவில் வருவர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, கடந்த 2 ஆண்டுகளாக 2வது சீசனின்போதும், அரசு தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, மலர் அலங்காரங்களும் செய்யப்படுகின்றன. இம்முறை 10 ஆயிரம் தொட்டிகளில் மலர் அலங்காரங்கள் செய்ய பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பூங்கா முழுவதும் மலர் செடிகள் நட திட்டமிட்டுள்ளது. நேற்று பூங்காவில் மலர் நாற்று நடவு பணிகளை தோட்டக்கலை இணை இயக்குநர் மோகன் துவக்கி வைத்தார். தொழிலாளர்கள் பாத்திகளில் நாற்று நடவு பணிகளை துவக்கினர். பெட்டூனியா, மேரிகோல்டு, பேன்சி உள்ளிட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. 2 லட்சம் மலர் நாற்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் நவம்பர் வரை பூங்காவில் அனைத்து மலர் செடிகளிலும் வண்ண மலர்கள் பூத்து குலுங்கும். இது சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook