மேற்கு வங்கத்தில் மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர் கைது
ஹவுரா :மேற்கு வங்க பள்ளியில் மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக இருந்தவர் தேபாசிஸ் தாஸ் (47). 5 முதல் 8ம் வகுப்பு வரை ஆங்கிலம் கற்பித்து வந்த இவர், தனது செல்போனில் பதிவு செய்திருந்த ஆபாச படங்களை மாணவர்களுக்கு காட்டி உள்ளார். இந்த விஷயம் மாணவர்களின் பெற்றோருக்கு தெரிய வந்தது. ஆத்திரம் அடைந்த பெற்றோர் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். தலைமை ஆசிரியர் தாபாஸ் சத்தோபாத்யாயாவிடம் இதுகுறித்து முறையிட்டனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தலைமை ஆசிரியர் உறுதியளித்தார். இந்நிலையில் போலீசிடமும் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஆசிரியர் தாஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்களுக்கு ஆபாச காட்டுவது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றம்.