காஞ்சி மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்
காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அனிஷ் சாப்ரா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மின்மோட்டார் பொருத்திய இலவச மூன்று சைக்கிள் வழங்கப்பட உள்ளது. 18 வயது நிரம்பிய மாணவர்கள், இளைஞர்கள், சுயதொழில் புரிவோர், இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இதற்காக தேசிய அடையாள அட்டை, பள்ளி, கல்லூரியில் பயின்றதற்கான சான்று, பணிபுரிவதற்கான சான்று, குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் செங்கல்பட்டில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அலுவலகத்தை அணுகி பயனடையுங்கள். மேலும் விவரங்களை 044, 27431853 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அறிக்கையில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.