‘கோச்சடையான்’ படப்பிடிப்பு : லண்டனிலிருந்து சென்னை திரும்பினார் ரஜினி
சென்னை: லண்டனில் நடைபெற்ற கோச்சடையான் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.
ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் ‘கோச்சடையான்’ படத்தை, ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா இயக்குகிறார். படத்தின் சில காட்சிகளை லண்டனில் ஷூட் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, ரஜினிகாந்த், சவுந்தர்யா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் 20 பேர் கடந்த 17ம்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன் சென்றனர்.
அப்போது தீபாவளிக்கு ‘கோச்சடையான்’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ரஜினி தெரிவித்தார். இந்நிலையில், லண்டன் படப்பிடிப்பு திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே முடிந்தது. இதையடுத்து, ரஜினி, சவுந்தர்யா உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் இன்று அதிகாலை 3.30 மணிக்கு லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை திரும்பினர்.