மீண்டும் பணி வழங்க கோரி மக்கள்நல பணியாளர்கள் பிச்சை எடுத்து போராட்டம்
திருவள்ளூர் : மீண்டும் பணி வழங்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தினர் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நேற்று நடத்தினர்.
திருவள்ளூரில் நடந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். தலைவர் தயாளன், அமைப்பாளர் சந்திரபாபு, ஒன்றிய தலைவர்கள் சந்தானம், மோகன், பாஸ்கர் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் அருள் டேனியல் கண்டன உரையாற்றினார். ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த கோரியும், மீண்டும் பணி வழங்க கோரியும் கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 85 பேரை திருவள்ளூர் போலீசார் கைது செய்தனர். அவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து, மாலையில் விடுவித்தனர்.