பொன்னேரி : திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா மீஞ்சூரை அடுத்த வல்லூரில் உள்ள திமுக இளைஞரணி அலுவலகத்தில் நடந்தது. திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்எஸ்கே. ரமேஷ்ராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், கிளைகழக செயலாளர் சேகர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தமிழரசன், இளைஞரணி அரிகிருஷ்ணன், மாணவரணி வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சிகொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி ஏழைகளுக்கு வேட்டி சேலை, இளைஞர்களுக்கு பேண்ட், சட்டை மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது. வெள்ளிவாயல் சாவடி, நாப்பாளையம், அத்திப்பட்டு, பட்டமந்திரி, நாலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு இலவச சீருடை, பிரியாணி வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் ராமமூர்த்தி, ரவி சந்திரன், ஆல்பர்ட் குணசேகரன், ஆனந்தன், சவுந்தர்ராஜன், வெற்றிசெல்வன், நாப்பாளையம் ஸ்டாலின் நாகலிங்கம், வல்லூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் பொம்மி ராஜசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொன்னேரியில் ஒன்றிய பொறுப்பாளர் பாஸ்கர் சுந்தரம், நகர பொறுப்பாளர்கள் பா. சங்கர், லெனின், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணி தலைமையில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook