|
|||||
|
சில்மிஷம் செய்த வாலிபருக்கு நடிகை சமந்தா 'பளார்'
கருத்துகளை தெரிவிக்க விண்ணைத் தாண்டி வருவாயா, மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி உள்பட பல படங்களில் நடித்தவர் இளம் நடிகை சமந்தா. தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் நேற்று திருப்பதியில், ஒரு பெரிய ஷாப்பிங் கடை திறப்பு விழாவுக்கு சென்றிருந்தார். காரிலிருந்து இறங்கியதும், அவரை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். நிறைய பேர் திரண்டதால், கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். இதை சாக்காக பயன்படுத்தி, சில வாலிபர்கள் அவரைத் தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதனால் கோபமான சமந்தா, ஒரு வாலிபரின் கன்னத்தில் ஓங்கி அறை விட்டார். அந்த வாலிபர் அங்கிருந்து ஓடி விட்டார். பின்னர் போலீசார் வந்து, கூட்டத்தை விலக்கி, சமந்தாவை பத்திரமாக மீட்டனர். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த வர்களும், அவரிடம் மன்னிப்பு கேட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதே போல திருப்பதி கோயிலுக்கு வந்த போது, தன்னிடம் சில்மிஷம் செய்த ரசிகருக்கு ஸ்ரேயாவும் பளார் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில
|
|