சென்னை : காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(68). இவர் தீபாவளிக்கு புது டிரஸ் வாங்க தனது மனைவி கமலக்கன்னியுடன் நேற்று தி.நகருக்கு வந்தார். அங்குள்ள ஒரு கடையில் சீனிவாசன் துணிகளை பார்த்துக் கொண்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் கமலக்கன்னி கடைக்கு வெளியே காத்திருந்தார். இதை நோட்டம் விட்ட டிப் டாப் ஆசாமி ஒருவர் கமலகன்னியிடம் நைசாக பேச்சுக் கொடுத்தார். மிகவும் பவ்யமாக அந்த நபர் பேசியதால் தனது குடும்பத்தை பற்றி அவரிடம் கூறியிருக்கிறார் கமலக்கன்னி. சீனிவாசன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்ற தகவலையும் கூறியுள்ளார். உடனே அந்த நபர், Ôநான் ஓய்வு பெற்றவர்களுக்கு பென்ஷன் வாங்கி தரும் ஏஜென்ட்Õ என கூறியுள்ளார். நான் அவருக்கு உடனடியாக பென்ஷன் வாங்கி தருவேன் என¢றவர், அதற்கு உங்களுடைய போட்டோ வேண்டும் என்று கேட்டுள்ளார். கணவர் வருவதற்குள் அருகில் உள்ள ஸ்டுடியோவில் போட்டோ எடுத்துவிடலாம் என்று கூறியதை கமலக்கன்னியும் நம்பி சென்றுள்ளார். Ôபோட்டோ எடுக்கும்போது, நகை அணியாமல் எடுக்க வேண்டும். அப்போதுதான் அதிகாரிகள் நம்புவார்கள்Õ என்று ரீல் விட்டுள்ளார். உடனடியாக அவரும் தனது கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை கழற்றி அந்த நபரிடம் கொடுத்துள்ளார். அப்படியே நைசாக வெளியே வந்தவர், தப்பி ஓடிவிட்டார். போட்டோ எடுத்துவிட்டு அந்த நபரை தேடியபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை கமலக்கன்னி உணர்ந்தார். புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook