Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2011
28
Aug
ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்து உள்ளது திருமூர்த்தி அணை. வனங்களால் சூழப்பட்டு கண்ணுக்கு அழகாக காட்சி அளிக்கும் அணையில் ‘ஆபத்தும்’ இருப்பதாக சொல்லப்படுகிறது.  வனங்களுக்கு இடையே பஞ்ச லிங்க அருவி இருக்கிறது. இது ஓடையாக வழிந்தோடி அணையில் சங்கமிக்கிறது. பஞ்சலிங்க அருவியிலும், அணை கரையிலும் மக்கள் குளிப்பது வழக்கம். இங்கு குளிப்பவர்கள் நீரில் மூழ்கி சாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும், இதற்கு நிராசையுடன் இறந்தவர்களின் ஆவிதான் காரணம் என்றும் அப்பகுதி மக்கள் அச்சத்தோடு சொல்கிறார்கள்.  
 
அணை கட்டி 53 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை அருவியிலும், அணையிலும் மூழ்கி மூச்சு திணறி பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது. ‘அணையில் உள்ள யானைகஜம், காளியம்மன்கோயில், பரையங்காடு பள்ளம் ஆகிய இடங்களில் குளிப்பவர்கள் அநியாயமாக பலியாகின்றனர். இங்கு நீச்சல் தெரியாதவர்கள் மட்டுமல்ல, நன்றாக நீச்சல் தெரிந்தவர்கள்கூட இறக்கின்றனர். இதற்கு கெட்ட ஆவிகளின் நடமாட்டம்தான் காரணம். இந்த ஆவிகள்தான் அணையில் குளிப்பவர்களின் உயிரை பலி வாங்குகின்றனÕ என்று திகிலுடன் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.  

அணை கட்டுவதற்கு முன்பு, மலையில் இருந்து ஓடி வரும் நீர், பாசனத்துக்கு நேரடியாக பயன்படுத்தப்பட்டதாகவும், பாலாற்றை தடுத்து அணை கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் உயிரை விட்டதாகவும், அவர்களின் ஆவிதான் நிராசையுடன் அணையை சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.  மேலும் சிலரோ, ‘அணையில் மூழ்கி பலியாவோர் பெரும்பாலும் வெளியூர்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு உறவினர்கள் தங்கள் பகுதியிலேயே திதி கொடுக்கின்றனர். இதனால் மனம் சாந்தி அடையாமல் ஆவிகள் அணையிலேயே திரிந்து  பலரை பலி வாங்குகின்றனÕ என்றும் கூறுகின்றனர். ‘குளித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று தண்ணீருக்குள் யாரோ இழுத்தது போன்று மூழ்குகின்றனர். உயிருக்கு போராடுபவரை காப்பாற்ற செல்பவரும் பலியாகி விடுகிறார். சடலங்களையும் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்து விட முடியாதுÕ என்று சொல்லும் மக்களின் பேச்சில் பயத்துக்கு குறைவில்லை.

அணையில் மேல் உள்ள பஞ்சலிங்க அருவியிலும் இதே ஆவி கதைகள் உலா வருகின்றன. இதற்கு காரணம் இங்கும் அடிக்கடி பலிகள் நேர்வதுதான். பரிகார பூஜைகள் செய்து ஆவிகளை சாந்தம் அடைய செய்தால் தான் இறப்புகளை தவிர்க்க முடியும் என்று சிலர் சொல்கின்றனர். அதே போல் பஞ்சலிங்க அருவியில் ஏற்படும் பலி சம்பவங்களுக்கு காரணம், அருவியில் திடீரென்று பெருக்கெடுக்கும் வெள்ளம். குளிக்கும்போது சாதாரணமாக கொட்டும் நீர், திடீரென்று பெருக்கெடுக்கும்போது அருவியில் குளிப்பவர்கள் தாங்க முடியாமல் தப்பி விடுகிறார்கள். அருவிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் ஆங்காங்கு குளிப்பவர்கள்தான் வெள்ளத்தில் தப்பிக்க வழியில்லாமல் அடித்துச்செல்லப்படுகின்றனர். அங்குள்ள ஒட்டப்பாறை, ஏழுமுக்கு, மாமரத்து கஜம் ஆகிய இடங்களில் உள்ள பொந்துகளில் சிக்கி உயிரை விடுகின்றனர்.  

அணையில் குளிக்கவும், அருவிக்கு செல்லும் ஓடை வழித்தடங்களில் குளிப்பதையும் வனத்துறை, பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை கடுமையாக தடுத்து நிறுத்தினால் உயிர்ப்பலியாவது நிற்கும். அது வரை ஆவி, பலி வாங்கல் என்று கூறுவது மர்மமாக தான் இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர். ‘பேயும் இல்லை. பிசாசும் இல்லை. அணையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களில் சிக்குபவர்கள் தண்ணீரில் மூழ்கி இறக்கிறார்கள்Õ என்று வேறு சிலர் சொல்கிறார்கள். இருப்பினும் ஆவி பயம் மக்களை விட்டு இன்னும் அகவில்லை.
-உடுமலை எஸ்.கண்ணன்

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க
CUMBUM P.T.MURUGAN - TRICHY
8/30/2011 -- 17:16:56

திருமூர்த்தி அணைக்கும், நீர்வீழ்ச்சிக்கும் சென்றுள்ளேன். பஞ்சலிங்க அருவியும், அதன் மேல் புறமும் ஆபத்தான இடங்கள் தான். கவனம் குறைந்தால், வெள்ள பெருக்கின்போது நீரில் சிக்கி உயிர் இழக்க வாய்ப்பு உள்ளது. மற்றபடி, இங்குள்ள ஆவிகள் தான், மக்களின் மரணத்துக்கு காரணம் என்பது தப்பு. பயத்தின் காரணமாகவும், விபத்தாலும் தான் இங்கு சாவு நடக்கிறது. உல்லாச பயணிகளுக்கு பாதுகாப்பு வசதிகளை அதிகரித்தால், உயிர் பலியை தடுத்து விட முடியும். திருமூர்த்தியும், பஞ்சலிங்கமும் இருக்கும் வரை, இங்கு பிசாசுகளுக்கு வேலை இல்லை. இங்கு வரும் பயணிகளில் பலர், குடித்து விட்டு போதையில் தண்ணீருக்குள் மூழ்கி போவதும் உண்டு. நாமாக வலிய போய் ,தண்ணீரில் விழுந்து சாவதற்கு பெயர், பலி வாங்குதல் ஆகாது.

P.T.Murugan - Trichy
8/31/2011 -- 14:38:6

ஆயிரம் பேர் வோட்டு போட முடியாதபடி பேயாகி விட்டது, அரசியல் கட்சியினருக்கு பலத்த நஷ்டம். சர்வ கட்சியினரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, மேலும் பேய்கள் உற்பத்தி ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

P.T.MURUGAN - TRICHY
9/1/2025 -- 10:34:44

ஆட்களை பலி வாங்குவது, பேய்களுக்கும் ஆவிகளுக்கும் நல்லது தான். தங்கள் கூட்டத்தின் எண்ணிக்கை அதிகமானால், யாருக்கு தான் மகிழ்ச்சி இருக்காது?

kumar - chennai
11/17/2011 -- 10:33:7

இட் இஸ் நாட் குட் ஹாபிட் இன் திஸ் வேர்ல்ட் நோவடிஸ்

fareed - trichy
2/8/2025 -- 12:33:26

எது எப்படி இருக்குன ஆட தெரியாத குறத்தி தெரு கோணல இருகுனால அந்த மாதிரி நீச்சல் தெரியாம பொய் செத்துட்டு பேயி இருக்கு பிசாசு இருக்குனு சொல்லறது முட்டாள் தனம் .

Ranganathan - Udumalpet
7/30/2012 -- 14:51:53

Ithellaam manitha ennankal antha idam punthamaanathu ithuvarai pei pariya vathanthi athagam varavillai. athu aalyangal niraintha idam. 99% no chance

Ragu - Chennai
9/19/2012 -- 12:15:9

இ டோன்ட் பெலிவே திஸ்

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana