உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த நேனாம்பூண்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நின்ற கோடி நீர்வாழி அம்மன் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் சங்காபிஷேகம் விழா நடந்தது. இதையடுத்து நேற்று வரை கோயில் வளாகத்தில் மண்டல பூஜைகள் நடைபெற்றது.மண்டல பூஜை நிறைவு விழா நாளான நேற்று, அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி தேவன்பு, ஆலய விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.