இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகம்மது ஷம்மி, பங்களாதேசுடன் நடந்த காலிறுதி போட்டியில், பந்து வீசும் போது, கீழே விழுந்ததில் லேசான காயமடைந்தார். அவரது முழங்கால் மூட்டில் லேசான காயம் ஏற்பட்டது. இந்த காயத்தில் இருந்து மீண்டு வரும் முயற்சியாக, நேற்றைய பயிற்சி நேரத்தின் போது, ஷம்மி சிறிது நேரம் பயிற்சியில் ஈடுபடவில்லை. இடைவேளை எடுத்து கொண்டார். ஆனால் ஷம்மி யின் இந்த காயம் குறித்து கவலையடைய தேவை யில்லை என இந்திய அணி யின் மீடியா மேனேஜர் பாபா உறுதிபட கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஷம்மி 100 சதவீத உடல் தகுதியுடன் உள்ளார். ஆஸ்திரேலியா வுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என்றார்.உலக கோப்பை தொடரில் ஷம்மி இதுவரை 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதே சமயம் நேற்றைய பயிற்சியின் போது, காயம் காரணமாக விளையாடாமல் உள்ள புவனேஸ்வர்குமார், வலைப்பயிற்சி மேற்கொண்டார். ஆனால் காயம் காரணமாக மட்டுமே அணியில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும், மற்றபடி இதே அணியே தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கும் எனவும், கேப்டன் டோனி கூறியுள்ளதால், புவ னேஸ்வர் குமாருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே.