கடலில் விழுந்த மீனவர் சாவு
தண்டையார்பேட்டை: காசிமேடு சிங்கார வேலன் நகரை சேர்ந்தவர் குப்பன் (45). மீனவர். கடந்த 17ம் தேதி நண்பர்களுடன் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றார். நேற்று அதிகாலை ஆழ்கடலுக்கு சென்றதும், அங்கிருந்த தூண்டில் படகுக்கு சென்ற குப்பன், வலை விரித்தார்.அப்போது, திடீரென நிலைதடுமாறி அவர் கடலில் விழுந்தார். அவரை மீட்க சக மீனவர்கள் முயன்றனர். அதற்குள் அவர் கடலில் மூழ்கினார். இதையடுத்து, கடலில் குதித்த மீனவர்கள், குப்பனின் உடலை மீட்டு படகுக்கு கொண்டு வந்தனர். புகாரின் பேரில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.