இந்தியாவை வீழ்த்துவது கடினமில்லை : சொல்கிறார் ஜெப்ரி பாய்காட்
நட்சத்திர வீரரான சச்சிஇங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜெப்ரி பாய்காட் அளித்த பேட்டி: இந்திய அணியை வீழ்த்துவது என்பது கடினமான செயலாக இருக்கும் என்று நினைக்கவில்லை. எனினும் சொந்த மண்ணில் விளையாடுவதால் சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும். டோனி, கோக்லி உள்ளிட்ட தரமான வீரர்கள் அணியில் பலர் உள்ளனர். சரியாக திட்டமிட்டு ஆடினால் டோனி அன்கோ தொடரை வெல்ல 60 சதவீத வாய்ப்புள்ளது.
ஜாகீர்கான் இல்லாத நிலையில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களை அணிக்கு கொண்டு வர இந்தியா முயற்சிக்கிறது. அதேவேளையில் சுழற்பந்து வீச்சையும் பலப்படுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் 2015ம் ஆண்டு நடைபெற உள்ள உலககோப்பை போட்டிக்கு அணியை உருவாக்குவதற்கு இதுதான் சரியான தருணம். இதற்காக இளம்வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை. இவ்வாறு அவர் கூறினார்.ன் பேஸ்புக்கில் கடந்த 2011ம் ஆண்டு இணைந்தார். அவரை 90 லட்சம் ரசிகர்கள் பின்பற்றுகின்றனர். இந்நிலையில் சச்சின், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள செய்தியில் எனது பேஸ்புக்கிற்கு அனைவரையும் வரவேற்கிறேன். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது எனது சிறுவயது கனவு. உங்களது ஆதரவு இல்லாமல் எனது 22 ஆண்டு கனவான உலககோப்பையை வென்றிருக்க முடியாது. எனக்காக பிரார்த்தனை செய்த அனை வருக்கும் நன்றி. என்னை ஸ்பெஷலாக உணர செய்த 90 லட்சம் ரசிகர்களுக்கு மீண்டும் நன்றி கூறுகிறேன் என கூறியுள்ளார்.