சென்னை: அந்தஸ்து குறுக்கிடாத ஜமீன் குடும்ப காதல் கதையாக உருவாகிறது ‘நீங்காத எண்ணம்Õ. இதுபற்றி இயக்குனர்கள் ஷாஜகான், செல்வராஜ் கூறியதாவது: ஜமீன் குடும்பத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், சரண்யா தம்பதியின் மகள் அங்கீதா. தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன் மகன் ஜெயந்த். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். ஜெயந்த், அங்கீதாவுக்கு காதல் மலர்கிறது. பிறகு பிரிய நேர்கிறது.
இந்த பிரிவுக்கு அந்தஸ்த்து தடையாக இல்லை. ஆனாலும் மற்றொரு புதிய பிரச்னை குறுக்கிடுகிறது. அது என்ன என்பதுதான் கதை. இதில் பொன்வண்ணன், டி.பி.கஜேந்திரன், மணிகுட்டி, சந்துரு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் பெரும்பகுதி புதுக்கோட்டை மாவட்டத்திலும் மற்றும் சென்னை, கொடைக்கானல் போன்ற இடங்களில் நடந்துள்ளது. மோகனராமன் ஒளிப்பதிவு. நா.முத்துகுமார் பாடல்கள். இமானுவேல் சதீஷ் இசை. ஏ.சஞ்சய் பிரகாஷ் தயாரிப்பு. இவ்வாறு இயக்குனர்கள் ஷாஜகான், செல்வராஜ் கூறினர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook