| |||||
|
2012
28
Aug ![]() கலிபோர்னியா: செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் ஒலிப்பதிவில், மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாசா விஞ்ஞானிகள், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, கியூரியாசிட்டி விண்கலம் அங்கு தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தை துளையிட்டும், படம் பிடித்தும் ஆய்வறிக்கையை அனுப்பி வருகிறது. இந்நிலையில் கியூரியாசிட்டி விண்கலம் கடந்த வாரம் பதிவு செய்து அனுப்பிய ஒலிப்பதிவை, விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது, அதில் மனிதர்களின் குரலை ஒத்த பல்வேறு சப்தங்கள் பதிவாகியிருப்பதை கண்டறிந்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளதால், அங்கு மனிதர்கள் வசிப்பது உறுதியாகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நாசா விஞ்ஞானிகளால் அனுப்பபட்ட கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாயில் மனிதர்கள் வாழுவதற்கு ஏற்ற சூழ்நிவை நிலவுகிறதா என்பதை ஆராய, கடந்த 6ம் தேதி அங்கு தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
prathap.c - coonoor
8/28/2012 -- 19:25:48 இது ஒரு mudhanmaiyana செய்தி தொகுப்பு. prakash - ny
8/28/2012 -- 21:1:57 இது தவறான செய்தி . நாசா கிரியாசிட்டியில் உள்ள தொழில்நுட்பம் மூலம் செவ்வாயிலிருந்து சார்லஸ் போல்டன்(நாசா அதிகாரி) இங்கிருந்து பேசியதை பூமிக்கு மறு ஒலிபரப்பு செய்தது. Babu - chennai
8/28/2012 -- 23:55:46 பூமியை அழிச்சது பத்தாதுன்னு அங்கேயும் போய் தாக்குதல் நடத்தி அளிக்க பார்க்காதீங்க. மிருகத்தைவிட கேவலமான அறிவு கெட்ட மனிதாபிமானம் இல்லாத மிருகங்களா muthukumaran - kumbakonam
8/29/2012 -- 0:25:10 நான் உலக செய்திகளை தெரிந்துகொள்வதற்கு உதவி புரியும் தமிழ் முரசு செய்தி தாளுக்கு எனது நன்றி punai - nai
8/29/2012 -- 6:29:50 'செவ்வாய் கிரகத்தில் மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளதால், அங்கு மனிதர்கள் வசிப்பது உறுதியாகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்' யோவ் அந்த மனுஷ குரல் பூமில பதிவு பண்ணி செவ்வாய்க்கு அனுப்பினது திரும்பி வந்திருக்கு jeba - tuticorin
8/29/2012 -- 6:34:33 good, i like it sivayogi - chennai
8/29/2012 -- 7:5:30 செவ்வாயில் மனித சப்தம் ஆராய்வது ஒருபுறம் இருக்கட்டும். பூமியில் ஏழை மனிதனின் வறுமையால் எழுப்பப்படும் சப்தம் குறைக்க வழியை ஆராய்வது முதன்மைப் பெற்றதாக இருக்கட்டும் ... manikandan - chennai
8/29/2012 -- 16:6:7 இ அம ஹாப்பி ஆல் தி பெஸ்ட் கோட் இஸ் லவ் sekar - MALAYSIA
8/29/2012 -- 16:20:38 விஞ்ஞான வளர்ச்சியில் இது ஒரு மைல் கல்.
|
|