இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நெல்லை அருகே பயங்கரம் கல்லூரி மாணவி வெட்டிக்கொலை : அண்ணன் வெறிச்செயல்

6/27/2016 2:55:51 PM
208 ரன்னை சேசிங் செய்து இந்தியா அபார வெற்றி: நான் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் எனது பங்கு இது தான்: ஆட்டநாயகன் விராட் கோஹ்லி பேட்டி பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு

நாங்குநேரி: நெல்லை அருகே கல்லூரி மாணவியை அண்ணனே வெட்டிக்கொலை செய்துள்ளார்.நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள மேல மூன்றடைப்பைச்சேர்ந்தவர் கணேசன் என்ற சிதம்பரம்(50) அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி சாந்தி(42). இவர்களது மகன்கள் கிருஷ்ணராஜா(25), செல்வம்(23), மகள் மாலா(22).இதில் கிருஷ்ணராஜா சென்னை வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் வேலை பார்க்கிறார். மாலா பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் எம்எஸ்சி முதலாம் ஆண்டு படித்தார். மாலா நெல்லை புது பஸ் நிலையத்தில் பஸ் ஏறும்போது அங்குள்ள பழக்கடையில் அடிக்கடி ஜூஸ் குடிப்பாராம். அப்போது அந்த கடையில் வேலைபார்த்த சார்லஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு மனைவி, 2குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் காதல் விவகாரம் மாலா வீட்டிற்கு தெரியவந்ததும் மகளை கண்டித்துள்ளனர்.

கடந்த 2 மாதத்திற்கு முன் மேலப்பாளையத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாலா, அங்கு செல்லவில்லை.இதுபற்றி மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில் காதல் ஜோடி கோவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவர்களை மீட்டு மூன்றடைப்பு போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் பேசினர். போலீசாரின் அறிவுரைப்படி மாலா பெற்றோருடன் சென்றார். சார்லசை மனைவி அழைத்துச் சென்றார்.

இந்நிலையில், கிருஷ்ணராஜா லீவில் சில நாட்களுக்கு முன் சொந்த ஊர் வந்தார். தனது தங்கை காதல் விவகாரம் தெரியவந்ததால் மாலாவை உறவினருக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தனர். தனக்கு திருமணம் வேண்டாம் என்று மாலா கூறினார். இதன் காரணமாக கிருஷ்ணராஜாவிற்கும் மாலாவிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கிருஷ்ணராஜா, வீட்டில் கிடந்த அரிவாளால்  மாலாவை வெட்டிவிட்டார். படுகாயம் அடைந்த மாலாவை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் மாலா இறந்தார்.இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணராஜாவை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை சட்டத்தை மீறிய பாஜ அரசு நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை



  • உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல் அட்டவணை ரத்து: நடத்தை விதிகள் உட்பட அனைத்து உத்தரவுகளும் வாபஸ்



  • திருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி



  • இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு



  • உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வாபஸ்: புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டு தேர்தல் நடத்தப்படும்... மாநில தேர்தல் ஆணையர் தகவல்



  • காற்றழுத்த தாழ்வு நிலை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 3 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தம்



  • ‘உள்ளாட்சி தேர்தல் வரும்.. ஆனா வராது..’ மோசடிகள் செய்யவே தேர்தலை பிரித்து, பிரித்து நடத்துகிறார்கள்...கே.பாலகிருஷ்ணன் தாக்கு



  • வீட்டை சுத்தம் செய்யும் போது விபரீதம்: ஷூவில் மறைந்திருந்த பாம்பு கடித்து பெண் பலி



  • ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 11ம் தேதி விண்ணில் பாய்கிறது



  • மின்வாரியத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com