இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

3வது முறையாக இன்று ரூ.25 உயர்வு: வீட்டு காஸ் சிலிண்டர் விலை நடப்பு மாதம் ரூ.100 அதிகரிப்பு

2/25/2021 5:34:25 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

சேலம்: பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பை தொடர்ந்து, வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை இன்று திடீரென ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு மாதம் 3வது முறையாக விலையேற்றப்பட்டு ரூ.100 அதிகரித்துள்ளதால் மக்களுக்கு பெரும் சுமை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி அமைத்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றுகின்றனர். காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு ஒரு முறை என மாற்றப்பட்டு வந்தது. ஆனால் சமீபகாலமாக மாதத்திற்கு 2 முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், நடப்பு மாதம் முதன்முறையாக இன்று 3வது தடவையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு மாதம் (பிப்ரவரி) கடந்த 4ம் தேதி விலையை அதிகரித்து எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அதில், நாடு முழுவதும் 14.2 கிலோ எடைக்கொண்ட வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலையை ரூ.25 அதிகரித் தனர். இதனால் சென்னையில் ரூ.710க்கு விற்கப்பட்ட மானியமில்லா சிலிண்டர் ரூ.25 அதிகரித்து ரூ.735 ஆகவும், சேலத்தில் ரூ.728ல் இருந்து ரூ.753 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இதுவே டெல்லி, மும்பையில் ரூ.719, கொல்கத்தாவில் ரூ.745.50 ஆக உயர்ந்தது.

2வது முறையாக கடந்த 15ம் தேதி காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இதனால் சென்னையில் ரூ.735க்கு விற்கப்பட்ட நிலையில், ரூ.50 உயர்ந்து ரூ.785 ஆக நிர்ணயிக்கப்பட்டது. சேலத்தில் ரூ.753ல் இருந்து ரூ.803 ஆக உயர்ந்தது. இதுவே டெல்லி, மும்பையில் ரூ.769 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.795.50 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் நடப்பு மாதம் 3வது முறையாக இன்று (25ம் தேதி) காஸ் சிலிண்டர் விலை திடீரென ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதனால் நேற்று வரை வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலை சென்னையில் ரூ.785க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.25 உயர்ந்து ரூ.810 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ரூ.803ல் இருந்து ரூ.828 ஆக உயர்ந்தது. இதுவே டெல்லி, மும்பையில் ரூ.794 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.820.50 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடைக்கொண்ட வர்த்தக சிலிண்டர் விலையை இன்று ரூ.5 குறைத்துள்ளனர். இம்மாதம் 1ம் தேதி ரூ.191 அதிகரிக்கப்பட்ட நிலையில், 2 தடவையாக ரூ.24 மட்டும் குறைத்திருக்கின்றனர். இதனால், அதன் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை நடப்பு மாதம் 4ம் தேதி ரூ.25ம், 15ம் தேதி ரூ.50ம், இன்று ரூ.25ம் உயர்த்தப்பட்டதால், இம்மாத விலையேற்றம் என்பது ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. இது சாதாரண மக்களை கடுமையாக பாதிப்படைய செய்துள்ளது. ஏற்கனவே பெட் ரோல் விலை தினமும் 25 காசு முதல் 40 காசு வரையில் உயர்த்தப்படுவதால், அதன் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத நிலையில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் சில மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐ எட்டிவிட்டது. தமிழகத்தில் ரூ.94ஐ எட்டியிருக்கிறது. டீசல் விலையும் வடமாநிலங்களில் ரூ.90ஐயும், தமிழகத்தில் ரூ.86ஐயும் கடந்துள்ளது. பெட்ரோல், டீசலை தொடர்ந்து காஸ் சிலிண்டரின் விலையும் அதிகரிக்கப் பட்டிருப்பது மக்கள் தலையில் விழுந்த பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு பாதிப்பில் இருந்து இன்னும் பொதுமக்கள் முழுமையாக மீண்டு வராத நிலையில், அவர்களின் மீது தொடர்ந்து சுமையை ஏற்றி வருகின்றனர்.

இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வகையில், மக்களின் அன்றாட தேவையாக விளங்கும் காய்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் விலையும், கட்டமைப்பை மேற்கொள்ளும் பொருட்கள் விலையும் பல மடங்கு உயரும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் சில
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி



  • ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்



  • சென்னையில் இன்று காலை திடீர் மழை: 4 மாவட்டங்களில் கோடை மழை பெய்யும்..! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • தமிழகத்தில் கொரோனா மீண்டும் உச்சம்: கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு?..காபந்து முதல்வர் எடப்பாடி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை



  • தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் கொரோனாவுக்கு பலி:



  • இந்திய கம்யூனிஸ்ட், பாஜ வேட்பாளர்களுக்கு கொரோனா



  • கொரோனா பாதிப்பு தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை



  • மேற்குவங்கத்தில் 4ம் கட்ட தேர்தல் 44 சட்டமன்ற தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு: மத்திய அமைச்சர் உட்பட 3 பாஜ எம்பிக்கள் போட்டி



  • தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது: இரவு நேர ஊரடங்கு அறிவிக்கவும் திட்டம்



  • ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முறைகேடு 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com