இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

தெற்கு பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை

2/11/2021 5:08:03 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

சிட்னி: தெற்கு பசிபிக் கடல் பகுதியில் நேற்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி தீவுகள் மற்றும் அருகில் உள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஆசியா கண்டங்களுக்கு இடையே அமைந்துள்ள தெற்கு பசிபிக் கடலில், இந்திய நேரப்படி நேற்று மாலை 5.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூ கேலிடோனியாவுக்கு கிழக்கே 258 மைல் தொலைவில் உள்ள இந்த கடல் பரப்பு 10 கிமீ வரை ஆழம் கொண்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 டிகிரி பதிவாகியுள்ளதால், அடுத்த 5 மணி நேரத்தில் சுனாமியாக உருவாகும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையமும் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கடல் ஆழத்தில் சக்தி வாய்ந்த சுனாமி அலைகள் உருவாகி வருகின்றன. கடலின் ஆழத்திலேயே பயணம் செய்து, இந்த அலைகள் கரையை நோக்கி வரும் போது ஒரு மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்டிருக்கும். இதனால் பிஜி தீவுகள், நியூசிலாந்து மற்றும் வானாட்டு பகுதிகளை சுனாமி தாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் ஆஸ்திரேலிய கடலோர பகுதிகளிலும் சுனாமியின் தாக்கம் ஏற்படலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள புவியியல் ஆராய்ச்சி மையமும் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மையப்பகுதியில் இருந்து 340 மைல் கிழக்கே உள்ள லார்ட் ஹோவ் தீவுப்பகுதியை சுனாமி தாக்கக் கூடும் என்றும், அப்பகுதி மக்கள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறும் ஆஸி. அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அதே போல் நியூசிலாந்து நாட்டின் தேசிய அவசரகால மேலாண்மை நிறுவனமும், கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள், பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு உடனடியாக செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் கூறுகையில், ‘தெற்கு பசிபிக் கடலில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால், ஆக்லாந்து, கிரேட் பாரியர் தீவுகள் உள்ளிட்ட நியூசிலாந்து கடலோர பகுதிகளுக்கு பெருமளவில் சுனாமி அபாயம் உணரப்பட்டுள்ளது. கடலோரப்பகுதிகள் மற்றும் துறைமுகங்கள், ஆறுகள் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், உடனடியாக பாதுகாப்பான வேறு இடங்களை நோக்கி செல்ல வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள தென் பசிபிக் கடல் பகுதியில், சற்று தொலைவில் கடந்த 2018ம் ஆண்டு ரிக்டர் அளவு கோலில் 7.5 டிகிரி அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியின் தாக்குதலில், அருகே உள்ள இந்நாடுகளை சேர்ந்த சுமார் 4,300 பேர் மாயமாகி விட்டனர். அவர்கள் அனைவரும் உயிரிழந்து விட்டனர் என பின்னர் அறிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் பகுதியிலும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.01 மணியளவில் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தினால் உயிர்சேதம் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேசியா கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து உருவான சுனாமியில் இந்தோனேசியா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • சீன தயாரிப்பு தடுப்பூசி போட்ட நிலையில் இம்ரான்கான் மனைவிக்கும் கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு



  • இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகை..! அதிகாரிகள் அட்வான்ஸ் குழு நாளை காலை தமிழகம் வருகிறது



  • ரத்த கட்டு சம்பவங்களை தொடர்ந்து 9 நாடுகளில் ஆஸ்டிரா தடுப்பூசிக்கு தடை: உலக சுகாதார அமைப்பு விளக்கம்



  • ‘நாசா’ அனுப்பிய விண்கலம் செவ்வாய்கிரகத்தில் தரையிறங்கியது



  • வாஷிங்டனில் கோலாகல விழா ‘அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உரை



  • வன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை



  • புதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவிப்பு: தேர்தல் சட்டங்களை திருத்த வலியுறுத்தல்



  • அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; துப்பாக்கி சூடு: 4 பேர் பலி



  • இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு



  • தடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com