இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

ஹாங்காங் விவகாரத்தில் தலையீடு; 14 சீன அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை: வெளியுறவுத்துறை செயலர் அறிவிப்பு

12/8/2020 5:27:32 PM
காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சு

வாஷிங்டன்: ஹாங்காங் விவகாரம் தொடர்பாக 14 மூத்த சீன அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் தெரிவித்தார். இங்கிலாந்து தனது ஆதிக்கத்தின்கீழ் இருந்து வந்த ஹாங்காங்கை 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைத்தது. அதையடுத்து சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் தன்னாட்சி பிராந்தியமாக ஹாங்காங் இருந்து வருகிறது. ஆனால் அதன் தன்னாட்சியை சின்னாபின்னமாக்குகிற வகையில் சீனா அடாவடி செய்கிறது. குறிப்பாக சர்வதேச நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் ஒரு கொடிய சட்டத்தை ஹாங்காங்கில் கொண்டு வந்துள்ளது.

அதை எதிர்த்து போராடுகிறவர்களை ஒடுக்குகிறது. அதனால், சீனாவுக்கு எதிராக இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் அணி திரண்டுள்ளன. இந்நிலையில், ஹாங்காங்கின் சுயாட்சியை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி ஒரு திபெத்தியர் உட்பட 14 மூத்த சீன அதிகாரிகளை அமெரிக்கா தடை செய்தது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ கூறுகையில், ‘ஹாங்காங் மக்கள் தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்கு சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக்குழுவின் 14 மூத்த சீன அதிகாரிகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்கான விசாமீது கட்டுப்பாடுகள், பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விதிகளின்படி, இந்த 14 மூத்த சீன அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்கா வர தடை விதிக்கப்படுகிறது’ என்றார். ஏற்கனவே கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே இதுபோன்று சில சீன அதிகாரிகளுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளது. சீனாவின் மிகப்பெரிய சிப் செயலி நிறுவனமான எஸ்.எம்.ஐ.சி மற்றும் எண்ணெய் நிறுவனமான சி.என்.ஓ.சி உள்ளிட்ட நான்கு நிறுவனங்களை அமெரிக்கா தடுப்புப்பட்டியலில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • ‘நாசா’ அனுப்பிய விண்கலம் செவ்வாய்கிரகத்தில் தரையிறங்கியது



  • தெற்கு பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை



  • வாஷிங்டனில் கோலாகல விழா ‘அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உரை



  • வன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை



  • புதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவிப்பு: தேர்தல் சட்டங்களை திருத்த வலியுறுத்தல்



  • அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; துப்பாக்கி சூடு: 4 பேர் பலி



  • இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு



  • தடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்



  • ஜோ பிடன், நெதன்யாகுவை தொடர்ந்து தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டு கொண்ட சவுதி இளவரசர்



  • அமெரிக்க-இந்திய உறவை மேம்படுத்தியதற்காக மோடிக்கு ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com