இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை

12/4/2020 5:08:32 PM
காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சு

பொன்னேரி: பொன்னேரி அருகே நேற்று நள்ளிரவு கட்டிட கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் தங்க நகை, 6 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த உத்தண்டி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் முனிநாதன் (51). கட்டிட கான்ட்ராக்டர். இவர், இப்பகுதியில் திமுக கிளை கழக செயலாளராக உள்ளார். அதே பகுதியில் உள்ள இவரது உறவினர் ஒருவருக்கு உடல் நலம் சரியில்லாததால் நேற்று காலை அவரை அழைத்துக் கொண்டு சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு உறவினரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு நேற்று நள்ளிரவு வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்து உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் பொருட்கள் சிதறிக்கிடந்தன. அதிர்ச்சி அடைந்த அவர் திறந்து கிடந்த பீரோவை சோதனை செய்தபோது, அதில் வைத்திருந்த 200 சவரன் தங்க நகை, 6 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, முனிநாதன் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன், கைரேகை நிபுணர்கள் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மோப்ப நாய் ராஜா வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்துவிட்டு வீட்டுக்கு பின்புறம் உள்ள வயல்வெளி வரை ஓடிச் சென்று நின்றது. வழக்கு பதிவு செய்த பொன்னேரி போலீசார் அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பொன்னேரி உட்கோட்ட பகுதிகளில் அடிக்கடி கொள்ளை சம்பவம் நடப்பதால் அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

மேலும் சில
  • கஞ்சா சப்ளை செய்த 8 பேர் கைது : 18 கிலோ, கார், பைக் பறிமுதல்



  • திருவாரூர் அருகே இன்று காலை பயங்கரம்: அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொலை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



  • கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது



  • உடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி



  • கயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல்: தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் அதிரடி கைது



  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



  • திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் தொடர் பைக் திருட்டு 2 சிறுவர்கள் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com