இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தங்கராணி சொப்னாவுடன் 6 முறை சிவசங்கர் வெளிநாடு பயணம்

10/12/2020 6:01:43 PM
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே என்ஐஏ, மத்திய அமலாக்கத்துறை பலமுறை விசாரணை நடத்தி உள்ளது. கடந்த 8, 9 ஆகிய தேதிகளில் 22 மணிநேரம் விசாரணை நடந்தது. அப்போது ஆதாரங்களுடன் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே சிவசங்கர் பதில் அளித்துள்ளார். மற்ற கேள்விகளுக்கு தெரியாது என்று கூறி வந்துள்ளார். இந்த நிலையில் சிவசங்கர் தன்னுடைய சொந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 14 முறை வெளிநாடுகளுக்கு ரகசியமாக சென்று வந்தது அம்பலமாகி இருக்கிறது.

பெரும்பாலும் துபாய்க்குதான் அதிகமுறை சென்று வந்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட மத்திய உயரதிகாரிகள் அலுவல் ரீதியாக வெளிநாடு செல்லும் போது, அவர்களுக்கு சிறப்பு பாஸ்போர்ட் வழங்கப்படும். இதை பயன்படுத்திதான் அவர்கள் வெளிநாடு ெசல்ல வேண்டும். இதற்கான போக்குவரத்து, தங்கும் இடம் உள்பட அனைத்து ெசலவுகளையும் கேரள அரசே ஏற்கும். அலுவல் ரீதியாக செல்வதாக கூறி சிவசங்கர் தனது சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்று வந்தது ஏன் என்று விசாரணையின் போது அதிகாரிகள் கேள்விகளை கேட்டு துளைத்துள்ளனர். இதற்கான செலவை செய்தவர் யார்? என்றும் கிடுக்கிப்பிடியாக கேட்டு இருக்கின்றனர்.

சிவசங்கரின் 14 முறை ரகசிய பயணத்தின் போது 6 முறை தங்கராணி ெசாப்னாவும் சென்று இருக்கிறார். இதுதவிர 2 பேரும் ேசர்ந்து கூடுதல் பயணங்கள் சென்றார்களா? என்றும் விசாரணை நடந்து வருகிறது. லைப் மிஷன் திட்டம், தங்கம் கடத்தலில் கிடைத்த கமிஷன் ெதாகையை டாலர்களாக மாற்றி சொப்னா வெளிநாடுகளுக்கு கடத்தி உள்ளதாக தெரிகிறது. சொப்னா 1.90 லட்சம் டாலர் (₹1.38 கோடி) கடத்தியதை ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அதிக கரன்ஸிகளை, சிவசங்கர் துணையோடு கடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். சிவசங்கர் மட்டுமல்லாமல் ேமலும் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் அரசு பயணம் என்று கூறி, ெசாந்த பாஸ்ேபார்டில் வெளிநாடுகளுக்கு ெசன்று வந்துள்ளது தெரியவந்து இருக்கிறது.

இதுகுறித்தும் சுங்க இலாகா, மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.அலுவல் ரீதியாக ெசல்பவர்கள் மத்திய அரசிடம் அனுமதி ெபற வேண்டும் என்பது சட்டமாக இருந்தும், பலரும் இதை மீறி இருக்கிறார்கள். இவர்கள் வெளிநாடு ெசல்ல பணம் ெசலவு ெசய்தது யார்? இப்படி சென்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை, பரிசு பெற்றுள்ளதும் தெரியவந்து இருக்கிறது. இதற்கிடையே கடந்த 2017ம் ஆண்டு திருவனந்தபுரம் அமீரக துணைத்தூதர், முதல்வர் பினராயி விஜயனை அவரது வீட்டில் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியதாக சொப்னா, சுங்க இலாகாவிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி உள்ளார். ஆனால் எந்த தேதியில் சந்தித்தனர் என்பது நினைவில்லை என்றும் கூறி இருக்கிறார். இதன் உண்மைத்தன்மை குறித்து என்ஐஏ, சுங்க இலாகா, மத்திய அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கி உள்ளன.

மேலும் சில
  • சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு



  • டிராக்டர் பேரணியில் வன்முறை: விவசாய சங்கங்கள் மீது 22 வழக்குகள் பதிவு: டெல்லியில் 3 அடுக்கு பாதுகாப்பு



  • டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது போலீஸ் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு



  • 8 ஆண்டுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி: திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்



  • கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியா வருகிறது மாடர்னா தடுப்பூசி



  • கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்புகளுடன் குடியரசு தின விழா கோலாகலம்: டெல்லியில் குடியரசு தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்



  • தாகூரை போன்று தாடி: மோடியை கிண்டல் செய்யும் சிவசேனா



  • அமெரிக்காவை முந்துகிறது இந்தியா; 8 நாட்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தகவல்



  • நாளை மறுநாள் நடக்கும் குடியரசு தின விழாவிற்கு மத்தியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி: டெல்லியில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை



  • மே 29ம் தேதி காங். கட்சி தலைவர் தேர்தல்?.. செயற்குழு கூட்டத்தில் முடிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com