இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கேரள தங்க கடத்தல் வழக்கு: தங்கராணி சொப்னாவுக்கு வாக்குமூலம் நகல் தர மறுப்பு

10/11/2020 6:43:40 PM
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் சொப்னா மீது சுங்க இலாகா வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. அவரை காவலில் எடுத்தும், சிறையில் வைத்தும் பலமுறை சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சொப்னா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தன்னை கட்டாயப்படுத்தி சுங்க இலாகா வாக்குமூலம் பெற்றதாகவும், வாக்குமூலத்தின் நகலை தனக்கு வழங்க வேண்டும் என்றும், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சொப்னா மனுதாக்கல் செய்தார். மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கேரள உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்க சுங்க இலாகாவுக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சொந்த வாக்குமூலத்தின் நகலை சொப்னா கேட்பது சட்டப்படி செல்லாது. இந்திய குற்றவியல் சட்டப்படி வாக்குமூலத்தை தர வேண்டும் என்று கூற அதிகாரம் கிடையாது. உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக உத்தரவும் பிறப்பித்துள்ளது. அவர் அளித்த வாக்குமூலத்தில், தங்கம் கடத்தலில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. அவர்கள் வெளிநாடுகளில் பொதுவாழ்வில் முக்கிய பங்கு வகிப்பர்களாக உள்ளனர். அதிகார வலிமை பெற்ற விஐபிகளான அவர்களை நாங்கள் நெருங்கி வருகிறோம். இந்த நேரத்தில் ெசாப்னாவின் வாக்குமூலத்தை நாங்கள் வெளியிட்டால் அவர்கள் அனைவரும் தப்பிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே வாக்குமூலத்தை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலருக்கும் பங்கு: தங்கம் கடத்தலில் கைதான ரமீஸ், சொப்னாவுக்கு கடைசியாக ₹97 லட்சம் கமிஷனாக கொடுத்துள்ளார். கடைசியாக 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இது அதற்கு முன்பு கடத்தப்பட்ட தங்கத்துக்கான கமிஷனாகும். இதில் பெருந்தொகையை சொப்னா கேரள உயரதிகாரிகள் பலருக்கும் பங்குபோட்டு கொடுத்துள்ளார்.

மேலும் சில
  • சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு



  • டிராக்டர் பேரணியில் வன்முறை: விவசாய சங்கங்கள் மீது 22 வழக்குகள் பதிவு: டெல்லியில் 3 அடுக்கு பாதுகாப்பு



  • டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது போலீஸ் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு



  • 8 ஆண்டுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி: திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்



  • கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியா வருகிறது மாடர்னா தடுப்பூசி



  • கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்புகளுடன் குடியரசு தின விழா கோலாகலம்: டெல்லியில் குடியரசு தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்



  • தாகூரை போன்று தாடி: மோடியை கிண்டல் செய்யும் சிவசேனா



  • அமெரிக்காவை முந்துகிறது இந்தியா; 8 நாட்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தகவல்



  • நாளை மறுநாள் நடக்கும் குடியரசு தின விழாவிற்கு மத்தியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி: டெல்லியில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை



  • மே 29ம் தேதி காங். கட்சி தலைவர் தேர்தல்?.. செயற்குழு கூட்டத்தில் முடிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com