இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

காதல் திருமணம் செய்ததால் இளம்பெண் காரில் கடத்தல்: தந்தை, தாய் உட்பட 3 பேர் மீது வழக்கு

6/7/2020 3:03:16 PM
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

ஈரோடு: காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கடத்திச்சென்றது தொடர்பாக தந்தை, தாய் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (23). இவர் கார் டிரைவர். இதே பகுதியை சேர்ந்த பெருமாளின் மகள் நித்யா (20). இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பிறகு வெங்கடாசலம், மனைவியுடன் கொடுமுடி அருகே ஏமானூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்து விட்டார். இந்தநிலையில் காணாமல் போன மகளை அவரது பெற்றோர் தேடியபோது இருவரும் ஏமானூரில் இருப்பது தெரிய வந்தது.

கடந்த 1ம் தேதி நித்யாவின் தந்தை பெருமாள், தாயார் ஈஸ்வரி, சித்தப்பா சுப்பிரமணி ஆகியோர் வெங்கடாசலம் தங்கிருந்த வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்குள் நித்யாவும், வெங்கடாசலமும் இருந்த நிலையில் கதவை சாத்திக் கொண்டு வீட்டிற்குள் இருந்துள்ளனர். இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த 3 பேரும் நித்யாவையும், வெங்கடாசலத்தையும் தாக்கியுள்ளனர். நித்யாவை காரில் கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின்படி, கொடுமுடி போலீசார் நித்யாவின் தந்தை பெருமாள், தாயார் ஈஸ்வரி மற்றும் சித்தப்பா சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் சில
  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



  • கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது



  • உடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி



  • கயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல்: தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் அதிரடி கைது



  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



  • திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் தொடர் பைக் திருட்டு 2 சிறுவர்கள் கைது



  • முகப்பேரில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com