இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ஆவடி அருகே மீன் வியாபாரி கொடூர கொலையில் 3 பேர் கைது: பிரபல ரவுடிக்கு வலை

6/6/2020 3:06:29 PM
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

ஆவடி: ஆவடி அருகே மீன் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இருவரை வலைவீசி தேடி வருகின்றனர். ஆவடி அருகே அயப்பாக்கம், அன்னை அஞ்சுகம் நகர், பாட்டாளி குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (32). மீன் வியாபாரி. நேற்று காலையில் வீட்டில் இருந்த பாண்டியனை, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பாண்டியன் வெளியே அழைத்து சென்றார். பின்னர், அதே பகுதியில் பாண்டியனை 5 பேர் கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், கொலையான பாண்டியனின் மைத்துனர் சக்திவேலின் பைக்கை, அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (24) என்பவர் குடிபோதையில் காலால் உதைத்து சேதப்படுத்தியுள்ளார்.

இதனால் கார்த்திக்கை, பாண்டியனும், சக்திவேலும் தட்டி கேட்டுள்ளனர். அப்போது கார்த்திக்குக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பன்னீர் (35) என்பவர், சக்திவேலுக்கு போன் செய்து மிரட்டியுள்ளார். இதனால் முன்விரோதம் ஏற்பட்டது. அதற்கு பிறகுதான், நேற்று பாண்டியனை ரவுடி பன்னீர், கார்த்திக், பிரசாத்குமார், சிவலிங்கம், மற்றொரு பாண்டியன் ஆகிய 5 பேரும் அரிவாளால் வெட்டி கொன்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து, 5 பேரை வலைவீசி தேடி வந்தனர். அவர்களில் 3 பேரை இன்று காலை கைது செய்தனர். அவர்கள், பெரம்பூர், ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த சிவலிங்கம் (28), அயப்பாக்கம், அஞ்சுகம் நகரை சேர்ந்த பிரசாத்குமார் (26), அவரது தம்பி கார்த்திக் (24) ஆவர். அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ரவுடி பன்னீர், பாண்டியன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



  • கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது



  • உடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி



  • கயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல்: தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் அதிரடி கைது



  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



  • திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் தொடர் பைக் திருட்டு 2 சிறுவர்கள் கைது



  • முகப்பேரில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com