இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஐபில் போட்டிகள் தொடங்கும் நிலையில் ‘பேட்’ இல்லாம எப்படி விளையாடுவேன்?...விமானத்தில் ‘மிஸ்’ ஆனதால் ஹர்பஜன் அலறல்

3/9/2020 4:05:24 PM
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

மும்பை: இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளாருமான ஹர்பஜன் சிங், மும்பையிலிருந்து கோயம்புத்தூருக்கு இண்டிகோ விமானத்தில் சென்றார். இந்தப் பயணத்தில் அவரது பேட் தொலைந்து போனதாக தெரிகிறது. இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘நான் கோயம்புத்தூரில் தரையிறங்கும் போது ‘பேட்’ காணாமல் போனதை அறிந்தேன். எனது ‘பேட்’ இருக்குமிடம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது திருடப்பட்டதா? என்றும் என்னால் உறுதியாக கூற முடியவில்லை. பயிற்சிக்குப் பிறகு எனது பையை நான் திறந்து பார்க்கவில்லை. இந்தப் பயணத்திற்காக நான் விமானநிலையம் வந்த போது என்னிடம் இருந்த சுமையின் அளவு விமானத்தில் அனுமதிக்கப்பட்ட எடையை விட 35 கிலோ கூடுதலாக இருந்தது. இதனால் விமான அதிகாரிகள் அதற்காக 1.200 ரூபாய் செலுத்தக் கூறினர். ஆனால் எங்களது குழுவினர், ஏற்கனவே பயணத்தின் போது கூடுதல் பொருட்களை எடுத்து செல்வதற்கான குறிப்பிட்டத் தொகையை செலுத்தி விட்டதாக கூறி மறுத்தனர்.

எனது ‘பேட்’ காணாமல் போனதற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா? என்பது தெரியவில்லை. ஆனால் எனது ‘பேட்’ மிக முக்கியமான விஷயம். அதனை வைத்துதான் ஐ.பி.எல் போட்டியில் நான் விளையாட இருக்கிறேன். இதுதொடர்பாக விமான அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன்’ என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து விமான அதிகாரிகள் கூறுகையில், “ஹர்பஜன் சிங் சிரமத்திற்கு உள்ளானதற்கு நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். அவரின் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் அந்த ‘பேட்’டை கண்டுபிடித்து தருவோம்” என்றனர். ஐபில் போட்டிகள் இந்த மாதம் 29ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.  இந்தப் போட்டிகளுக்காக பயிற்சி பெறவேண்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன்  தோனி உட்பட சில வீரர்கள் சென்னை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி.20 உலக கோப்பை கவுன்டவுன் தொடக்கம்: வெற்றிகரமாக நடத்த கங்குலி உறுதி



  • 5ம் முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை ‘இளம் வீரர்கள் அனைவருமே திறமையாக ஆடினர்’மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி



  • ஐபிஎல் பைனலில் இன்று மும்பையுடன் மோதல்; முதல் முறையாக பட்டம் வெல்லுமா டெல்லி அணி?



  • அபுதாபியில் குவாலிபயர் 2 போட்டி ஐதராபாத்-டெல்லி இன்று பலப்பரீட்சை: இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார்?



  • அபுதாபியில் எலிமினேட்டர் போட்டி ஐதராபாத்-பெங்களூரு இன்று பலப்பரீட்சை



  • ஐதராபாத்-பஞ்சாப் இன்று மோதல் தோல்வியில் இருந்து மீளப்போவது யார்?



  • இன்றிரவு ஐபிஎல் லீக் போட்டி: ஐதராபாத்-டெல்லி மோதல்



  • இன்றிரவு 5வது லீக் ஆட்டம் மும்பை-கொல்கத்தா மோதல்



  • கடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல்; 14 நாட்கள் தனிமை உதவவில்லை: தோல்வி குறித்து கேப்டன் தோனி கருத்து



  • சிஎஸ்கே வெற்றி கூட்டணி தொடருமா?: இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com