வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
11/14/2019 2:34:43 PM
சென்னை: வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 17ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழையை முன்னிட்டு சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால், அணைகள், ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பியது. இந்தநிலையில், தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, கடலூர், தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். இதேபோல், இன்றும், நாளையும் மட்டுமே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 16,17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மழைக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் ஏதும் இல்லை எனவும் இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.