இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

விருத்தாசலம் அருகே ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த ஐம்பொன் சிலை கிடைத்தது

11/13/2019 3:30:22 PM
208 ரன்னை சேசிங் செய்து இந்தியா அபார வெற்றி: நான் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் எனது பங்கு இது தான்: ஆட்டநாயகன் விராட் கோஹ்லி பேட்டி பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பள்ளம் தோண்டும்போது ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த ஐம்பொன் சிலை கிடைத்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ஆலடி அருகே உள்ள பழையப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்ஜலீல்(70). இவருக்கு அப்பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் முந்திரி தோப்பு உள்ளது. தனது நிலத்தில் தேசிய வேளாண்மை திட்டத்தின் மூலம் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு அணை கட்டும் பணியை செய்து வந்தார். இதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் சுமார் 3 அடி ஆழம் மண்ணைத் தோண்டி அதன் மூலம் வாய்க்கால் கரை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது பொக்லைன் இயந்திரத்தில் சிக்கி சாமி சிலை ஒன்றும் அதனோடு பூஜை செய்வதற்கான சாமான்களும் இருந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆலடி போலீசார், விருத்தாசலம் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் முன்னிலையில் பூமிக்கடியில் இருந்த பொருட்கள் அனைத்தையும் தோண்டி எடுத்து அவைகளை விருத்தாசலம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தாசில்தார் கவியரசு முன்னிலையில் நகை மதிப்பீட்டாளர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் சிலை மற்றும் கிடைத்த அந்த பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் சுமார் 23 கிலோ ஐம்பொன்னாலான நர்த்தன கிருஷ்ணர் சிலை எனவும், மற்றவை பித்தளை மற்றும் செம்பு ஆகிய உலோகங்களால் ஆன சுமார் 25 கிலோ எடை கொண்ட 17 பூஜை சாமான்கள் எனவும், இவைகள் அனைத்தும் சுமார் 700 ஆண்டு முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை பழங்கால ஐம்பொன் சிலை எனவும், இதன் மதிப்பை தற்போது கணிக்க இயலாது எனவும் தாசில்தார் கவியரசு தெரிவித்தார். இதையடுத்து சிலை மற்றும் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து அதனடிப்படையில் அவைகளை அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்படும் எனவும் கூறினார். இதுகுறித்து ஆலடி போலீசார் மற்றும் விருத்தாசலம் வருவாய் துறையினர்‌ ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சில
  • ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை சட்டத்தை மீறிய பாஜ அரசு நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை



  • உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல் அட்டவணை ரத்து: நடத்தை விதிகள் உட்பட அனைத்து உத்தரவுகளும் வாபஸ்



  • திருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி



  • இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு



  • உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வாபஸ்: புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டு தேர்தல் நடத்தப்படும்... மாநில தேர்தல் ஆணையர் தகவல்



  • காற்றழுத்த தாழ்வு நிலை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 3 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தம்



  • ‘உள்ளாட்சி தேர்தல் வரும்.. ஆனா வராது..’ மோசடிகள் செய்யவே தேர்தலை பிரித்து, பிரித்து நடத்துகிறார்கள்...கே.பாலகிருஷ்ணன் தாக்கு



  • வீட்டை சுத்தம் செய்யும் போது விபரீதம்: ஷூவில் மறைந்திருந்த பாம்பு கடித்து பெண் பலி



  • ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 11ம் தேதி விண்ணில் பாய்கிறது



  • மின்வாரியத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com