இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

விளைநிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க தூத்துக்குடியில் பொதுமக்கள் எதிர்ப்பு: லாரியை சிறைப்பிடித்து மறியல்

11/13/2019 3:26:51 PM
208 ரன்னை சேசிங் செய்து இந்தியா அபார வெற்றி: நான் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் எனது பங்கு இது தான்: ஆட்டநாயகன் விராட் கோஹ்லி பேட்டி பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு

ஸ்பிக்நகர்: விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் நிறைவடைந்து தற்போது தூத்துக்குடி ஒன்றியம் வைகுண்டம் வடகால் பாசனத்திற்கு உட்பட்ட குலையன்கரிசல், பொட்டல்காடு கிராமங்களில் விளைநிலங்கள் வழியாக குழாய் பதிக்க முற்பட்டனர். இதனை கண்டித்து கிராம மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பலமுறை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஜூலை 17ல் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் விவசாய சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் சமாதானப் பேச்சுவார்த்தை தூத்துக்குடி தாசில்தார் ஜான் ஜெபராஜ் தலைமையில் நடந்தது. இதில் வைகுண்டம் வடகால் பாசன நிலங்கள் வழியாகக் கொண்டு செல்லாமல் மாற்றுப்பாதையில் 48 கண்மாய் கரையோரமாக, உப்பாற்று ஓடை வழியாக எரிவாயு குழாய் பதிக்க வேண்டும்,கிராமத்தின் அருகே எரிவாயு குழாய் கொண்டு செல்லக்கூடாது என்று பொதுமக்கள், விவசாய சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதிகாரிகள் பரிசீலிப்பதாக கூறிச்சென்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென குழாய் பதிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி கைவிடப்பட்டது. குழாயை இறக்க விடாமல் வாகனங்களையும் திருப்பி அனுப்பினர். பொட்டல்காடு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அதில், ‘’பொட்டல்காட்டில் அரசு பள்ளி, குடியிருப்பு, கல்லூரிகள் அருகிலும் ஊர் மத்தியிலும், விளைநிலத்திலும், எரிவாயு குழாய்கள் அமைக்க உள்ளனர். இதற்காக அப்பகுதியில் உந்துதல் நிலையமும் அமைக்கப்பட உள்ளது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதால் மாற்றுப்பாதையில் பணிகளை நிறைவேற்றவேண்டும்’’ கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் நேற்று திடீரென எரிவாயு குழாய் அமைக்கும் பணிக்காக லாரிகளில் குழாய்கள் கொண்டு வரப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் கிராமமக்கள் சென்று குழாய்கள் ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். முத்தையாபுரம் போலீசார் வந்து கிராமமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குழாய் ஏற்றிவந்த லாரி முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் சில
  • ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை சட்டத்தை மீறிய பாஜ அரசு நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை



  • உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல் அட்டவணை ரத்து: நடத்தை விதிகள் உட்பட அனைத்து உத்தரவுகளும் வாபஸ்



  • திருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி



  • இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு



  • உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வாபஸ்: புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டு தேர்தல் நடத்தப்படும்... மாநில தேர்தல் ஆணையர் தகவல்



  • காற்றழுத்த தாழ்வு நிலை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 3 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தம்



  • ‘உள்ளாட்சி தேர்தல் வரும்.. ஆனா வராது..’ மோசடிகள் செய்யவே தேர்தலை பிரித்து, பிரித்து நடத்துகிறார்கள்...கே.பாலகிருஷ்ணன் தாக்கு



  • வீட்டை சுத்தம் செய்யும் போது விபரீதம்: ஷூவில் மறைந்திருந்த பாம்பு கடித்து பெண் பலி



  • ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 11ம் தேதி விண்ணில் பாய்கிறது



  • மின்வாரியத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com