இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலானாலும் பெரும்பான்மை பலமுள்ள கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்

11/13/2019 3:18:19 PM
208 ரன்னை சேசிங் செய்து இந்தியா அபார வெற்றி: நான் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் எனது பங்கு இது தான்: ஆட்டநாயகன் விராட் கோஹ்லி பேட்டி பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமலாகியுள்ள நிலையிலும் பெரும்பான்மையுள்ள கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடந்தது. 289 உறுப்பினர் கொண்ட சட்டப்பேரவையில், பாஜ 105 இடத்திலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 44 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றின. பா.ஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இருந்தது. ஆனால், இரண்டு கட்சிகளும் முதல்வர் பதவி கேட்டதால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜவை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். பெரும்பான்மை இல்லாததால் பாஜவுக்கு ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி அமைக்க முற்பட்டது. ஆனால், அதுவும் கடைசி நேரத்தில் முடியாமல் போனது. தேர்தல் நடந்து சுமார் 20 நாட்களாகியும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதை தொடர்ந்து மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு மத்திய பாஜ அரசு பரிந்துரைத்தது. பரிந்துரையை ஏற்று, குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார். அதன்படி, மகாராஷ்டிராவில் நேற்று முதல் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. இந்த நிலையில் ஆட்சி அமைக்க கோரலாமா என்பது குறித்து தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ஒருவர் அளித்த விளக்கம்:  மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவின்படி நேற்று முதல் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து நிர்வாகப் பணிகளும் குடியரசு தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தையும் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநர் இனி மேற்கொள்வார். சுமார் 1 வருடம் காலம்தான் ஒரு மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியும். இந்த இடைப்பட்ட காலத்திற்குள் பெரும்பான்மை உள்ள கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். அப்படி பெரும்பான்மையை நிரூபித்தால் குடியரசு தலைவர் ஆட்சி உடனடியாக விலக்கி கொள்ளப்படும். ஒரு வருடத்திற்குள் ஆட்சி அமைக்கப்படவில்லை என்றால் சட்டப்பேரவை கலைக்கப்படும். அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சி அமைக்கும். இதுதான் விதிமுறையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு



  • ஐதராபாத்தை தொடர்ந்து மீண்டும் பயங்கரம்: உ.பி.யில் பெண் எரித்து கொலை....பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் வாங்க சொல்லி 5 பேர் கும்பல் வெறிச்செயல்



  • இளம் எஸ்பி முதல் சைபராபாத் போலீஸ் கமிஷனர் வரை வெறும் கைது செய்வதைத் தவிர வேறு ஏதாவது...? 2008 டிசம்பரை நினைவுபடுத்தியது இன்றைய என்கவுன்டர்



  • மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: ஐதராபாத் போலீசிடம் கற்றுக் கொள்ளுங்கள்... உத்தரபிரதேச அரசுக்கு மாயாவதி அட்வைஸ்



  • பலாத்காரம் செய்து பெண் டாக்டர் எரித்துக்கொலை: 4 கொடூரன்கள் சுட்டுக்கொலை



  • மறுவரையறை பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதால் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை



  • வேட்புமனுவில் தகவல்களை மறைத்த மாஜி முதல்வர் வழக்கு: ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு



  • ஜெகன் ஆட்சியில் மதமாற்றம் அதிகம்: நடிகர் பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி



  • ‘பாதிரியார்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள்’ கன்னியாஸ்திரி எழுதிய புத்தகத்துக்கு தடைகோரிய மனு தள்ளுபடி



  • கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com