இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தெலங்கானாவில் பயங்கரம் பெண் தாசில்தார் எரித்துக்கொலை: கொலையாளிக்கு தீவிர சிகிச்சை

11/5/2019 2:32:25 PM
என்கவுன்டரில் 4 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: பெண் டாக்டர் உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு... டிஜிபியுடன் மனித உரிமைகள் ஆணையம் இன்று சந்திப்பு ஜனநாயகத்தின் குரல் வளையை நெருக்குவது தான் பாஜவின் நோக்கம்: சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் பெண் தாசில்தார் எரித்துக்கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், அப்துல்லபூர்மெட் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்தவர் விஜயா(38). இவருக்கு கணவன் மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். அதே தாலுகா கவுரல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(40). இவருக்கு 7 ஏக்கர் நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்துள்ளது.  இந்த பிரச்னைக்கு தீர்வு காணும்படி கடந்த 2 மாதங்களாக சுரேஷ், தாசில்தார் விஜயாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் ‘நில விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு உள்ளதால் எந்த முடிவும் எடுக்கமுடியாது’ என தாசில்தார் விஜயா கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், தாசில்தாரை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி நேற்று மதியம் தாலுகா அலுவலகத்திற்கு வந்த சுரேஷ், தாசில்தார் விஜயாவிடம் பேசுவதாக கூறிவிட்டு அறைக்கு சென்றார்.அங்கு சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்த சுரேஷூக்கும், தாசில்தார் விஜயாவுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் தன்னிடம் இருந்த பெட்ரோலை தாசில்தார் விஜயா மீது ஊற்றி தீவைத்து கொளுத்தினார். அவர் உடலிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் தீப்பிடித்து எரிந்த விஜயா அலறித்துடித்தபடி வெளியே ஓடினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் ஓடிவந்து, விஜயாவை காப்பாற்ற முயன்றனர். இதில் அவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. ஆனால் சிறிதுநேரத்தில் அலுவலக வாசலிலேயே விஜயா உடல்கருகி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஹயத்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலத்த தீக்காயம் அடைந்த சுரேஷ், தீக்காயமடைந்த உதவியாளர் சந்திரய்யா மற்றும் டிரைவர் குருநாதரெட்டி ஆகியோரை மீட்டு ஹயத்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து ராட்சகொண்ட காவல்துறை ஆணையர் மகேஷ் பகவத் கூறியதாவது: தாசில்தார் விஜயா கொலைக்கு காரணமான சுரேஷ் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளார். அவருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பிறகு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். சுரேஷ் மீது கொலை முயற்சி வழக்கு மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை கிடைக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • குருவாயூரில் கஜராஜன் கேசவனுக்கு நினைவஞ்சலி: 22 யானைகள் பங்கேற்றன



  • என்கவுன்டரில் 4 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: பெண் டாக்டர் உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு... டிஜிபியுடன் மனித உரிமைகள் ஆணையம் இன்று சந்திப்பு



  • ஜனநாயகத்தின் குரல் வளையை நெருக்குவது தான் பாஜவின் நோக்கம்: சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு



  • மகாராஷ்டிராவில் அதிகாலை நடந்த பதவியேற்பு பின்னணி அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றது எதற்காக?... முதன்முதலாக வாயை திறந்தார் மாஜி முதல்வர் பட்நவிஸ்



  • தொழிற்சாலையில் அதிகாலையில் நடந்த பயங்கரம்: டெல்லி தீ விபத்தில் 43 பேர் பரிதாப பலி



  • பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு



  • ஐதராபாத்தை தொடர்ந்து மீண்டும் பயங்கரம்: உ.பி.யில் பெண் எரித்து கொலை....பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் வாங்க சொல்லி 5 பேர் கும்பல் வெறிச்செயல்



  • இளம் எஸ்பி முதல் சைபராபாத் போலீஸ் கமிஷனர் வரை வெறும் கைது செய்வதைத் தவிர வேறு ஏதாவது...? 2008 டிசம்பரை நினைவுபடுத்தியது இன்றைய என்கவுன்டர்



  • மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: ஐதராபாத் போலீசிடம் கற்றுக் கொள்ளுங்கள்... உத்தரபிரதேச அரசுக்கு மாயாவதி அட்வைஸ்



  • பலாத்காரம் செய்து பெண் டாக்டர் எரித்துக்கொலை: 4 கொடூரன்கள் சுட்டுக்கொலை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com