இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அத்திவரதரை தரிசனம் செய்ய அலை மோதும் மக்கள் கூட்டம்: இன்று பால்வண்ண ரோஸ் நிற பட்டுடுத்தி காட்சியளித்தார்

8/14/2019 3:30:17 PM
பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி மனைவிக்கு ரூ.9 கோடி சொத்து குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்: சென்னையில் உதயநிதி ஸ்டாலின் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை 1 ம் தேதி தொடங்கியது. வரும் 17ம் தேதிவரை 48 நாட்கள் நடைபெற உள்ளது. சயன கோலம் ஜூலை 31ம் தேதி முடிவடைந்தது. கடந்த 1ம் தேதி முதல் வரும் 16ம் தேதிவரை நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்த வைபவம் தொடங்கிய நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் ஆர்வத்துடன் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் சிரமமின்றி அத்தி வரதரை தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 43 நாட்களில் 80 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளனர்.

45வது நாளான இன்று பால்வண்ண ரோஸ் நிற பட்டுடுத்தி மனோரஞ்சிதம் பூ, செண்பகப்பூ, பட்டு மாலைகள் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் காஞ்சிபுரத்தின் எல்லைகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வெளியூரில் இருந்து வரும் கார், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கிருந்து இணைப்பு பஸ்கள் மூலம் பக்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று கட்டுக்கடங்காத பக்தர்கள் வருகையால் அத்திவரதர் தரிசனம் நள்ளிரவு வரை நீடித்தது. இந்த வைபவம் இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ரஜினி தரிசனம்

நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா மற்றும் குடும்பத்தாருடன், நேற்று நள்ளிரவு 12 மணியளவில்  வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்தார். மேற்கு கோபுரம் வழியாக வந்த அவர், விவிஐபி தரிசன பாதையில் சென்று அத்தி வரதரை தரிசனம் செய்தார்.

ஆண்குழந்தை பிறந்தது

அத்திவரதர் வைபவத்தில் இன்று காலை தரிசனம் மேற்கொள்ள வந்த நெமிலி பானாவரம் பகுதியை சேர்ந்த அசோக்குமார் மனைவி விமலாவிற்கு (25) திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை கோயில் வளாகத்தில் 16 கால் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ உதவி முகாமுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு 3 கிலோ எடையுடைய அழகான ஆண் குழந்தை சுகபிரசவத்தில் பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் சில
  • அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் கருவறையில் ஊஞ்சல் ஆடிய அம்மன்



  • பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி மனைவிக்கு ரூ.9 கோடி சொத்து



  • குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்: சென்னையில் உதயநிதி ஸ்டாலின் கைது



  • எம்-சாண்ட் பயன்படுத்தியதன் மூலம் ரூ.1,000 கோடி ஊழல் குறித்து விசாரித்து அமைச்சர் மீது தாமதமின்றி நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை எதிரொலி: கூட்டணி குறித்து பேச கட்சிகள் தீவிரம்



  • வீட்டில் குவித்து வைத்திருந்த ராக்கெட் லாஞ்சரை பயிற்சி மையத்தில் போட சென்றபோது வெடித்தது



  • விபத்தில் படுகாயமடைந்த தம்பதி: காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த அமைச்சர்



  • மலைப்பாதையிலேயே குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்: சாலை, மருத்துவ வசதி இல்லாததால் அவலம்



  • இருமாநில நதிநீர் பங்கீடு குறித்து தமிழக-கேரள அதிகாரிகள் சென்னையில் பேச்சுவார்த்தை



  • கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையத்தை ஜப்தி செய்ய வந்த விவசாயி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com