இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ரூ5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கல்வி அதிகாரி கைது: உதவியாளரும் சிக்கினார்

7/17/2019 4:26:29 PM
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் நியமனம்: டிடிவி தினகரன் அறிவிப்பு சபரிமலையில் மண்டல கால பூஜையை முன்னிட்டு வரும் 23ம் தேதி தங்க அங்கி ஊர்வலம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள பங்குநத்தம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவரது மனைவி மீனா (40). இவர் சிக்கம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மருத்துவ விடுப்பு எடுத்திருந்தார். கடந்த மாதம் 17ம் தேதி மீண்டும் பணியில் சேர்ந்தார். அவருக்கு சம்பளம் ஏப்ரல், மே மாதம் நிலுவையில் இருந்தது. அந்த 2 மாத நிலுவைத்தொகையை வாங்க, தர்மபுரி வட்டார கல்வி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.

ரூ5ஆயிரம் பணம் கொடுத்தால் தான், இரண்டு மாத சம்பள நிலுவைத் தொகை வழங்க முடியும் என்று உதவியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ஆசிரியர் மீனா, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில், நேற்று உதவியாளர் குமரேசனிடம் ரூ5 ஆயிரத்தை ஆசிரியர் மீனா லஞ்சமாக கொடுத்தார். உதவியாளர் குமரேசன் ரூ2 ஆயிரம் எடுத்துக்கொண்டு, ரூ3 ஆயிரத்தை வட்டார கல்வி அலுவலர் மேரி சகாயராணியிடம் அளித்தார். அவர் வாங்கிய பணத்தை மேஜையின் மறைவில் வைத்திருந்தார்.

அப்போது மறைந்திருந்த, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி (பொறுப்பு) கிருஷ்ணராஜன் தலைமையிலான, லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றிவளைத்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். வட்டார கல்வி அலுவலர் மேரி சகாய ராணி ஓய்வு பெற இன்னும் 3 மாதங்கள் இருந்த நிலையில் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மேரி சகாய ராணி கிருஷ்ணகிரி சிறையிலும், உதவியாளர் குமரேசன் தர்மபுரி கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

மேலும் சில
  • கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: பல்லடம் அருகே பரபரப்பு



  • ஜோலார்பேட்டையில் பயங்கரம்: சென்னை தொழிலாளியை கொன்று உடலை கிணற்றில் வீசி சென்றனர்



  • கோயம்பேடு பகுதிகளில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது



  • செங்கல்பட்டு அருகே மர்ம பொருள் வெடித்த விவகாரம்: விவசாயி வீட்டில் குவியல் குவியலாக ராக்கெட் லாஞ்சர் பறிமுதல்.... போலீசார் தீவிர விசாரணை



  • வாலிபரை அடித்து உதைத்து பணம், செல்போன் பறிப்பு: 2 பேர் கைது



  • காவல் நிலையத்தில் இருந்து தப்பிய வாலிபர் கைது; போக்சோ பாய்ந்தது



  • டாஸ்மாக் பாரில் அடிதடி வியாபாரி மண்டை உடைப்பு



  • எம்பிபிஎஸ் மாணவியை பலாத்காரம்: ஆணழகன் அதிரடி கைது



  • திருப்போரூர் அருகே பரபரப்பு: அடகு கடைக்காரரை துப்பாக்கியால் மிரட்டி நகைகள், பணம் கொள்ளையடிக்க முயற்சி



  • நாகர்கோவிலில் விடுமுறை தினத்தில் விளையாட்டு பயிற்சிக்காக பள்ளிக்கு மாணவியை வரவழைத்து சில்மிஷம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com