இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவள்ளூர் அருகே நரசிங்கபுரத்தில் குடிநீர் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

7/11/2019 3:24:47 PM
என்கவுன்டரில் 4 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: பெண் டாக்டர் உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு... டிஜிபியுடன் மனித உரிமைகள் ஆணையம் இன்று சந்திப்பு ஜனநாயகத்தின் குரல் வளையை நெருக்குவது தான் பாஜவின் நோக்கம்: சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு

திருவள்ளூர்: கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக குடிநீரின்றி தவித்த நரசிங்கபுரம் கிராம மக்கள், 300க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் பூந்தமல்லி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் நரசிங்கபுரம் ஊராட்சியில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அருகில் உள்ள கூவம் ஆற்றின் கரையில் போர்வெல் அமைத்து, மேல்நிலை தேக்க தொட்டியில் குடிநீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் மணல் கொள்ளை அதிகளவில் நடந்ததால் தற்போது நிலத்தடிநீர் முற்றிலும் குறைந்து விட்டது. இதனால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் இன்றி கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தி மனு கொடுத்தனர். தொடர்ந்து, கடம்பத்தூர் ஒன்றிய அதிகாரிகளிடம் புகார்கள் கொடுத்தும், முறையாக தண்ணீர் வழங்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நரசிங்கபுரம் கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர், இன்று காலை 6.30 மணியளவில் பூந்தமல்லி-அரக்கோணம் நெடுஞ்சாலையில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்தால்தான் மறியலை கைவிடுவோம்’ என கிராம மக்கள் கூறினர். இதையடுத்து வட்டாட்சியர் சீனிவாசன் விரைந்து வந்து, ‘உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து, மறியலை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அச்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் சில
  • திருவண்ணாமலையில் தீபத்திருவிழா 8ம் நாளான இன்று குதிரை வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா



  • ஆபாசபடம் பார்த்த தமிழகத்தை சேர்ந்த 3000 பேர் லிஸ்ட் ரெடி: சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு



  • ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை சட்டத்தை மீறிய பாஜ அரசு நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை



  • உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல் அட்டவணை ரத்து: நடத்தை விதிகள் உட்பட அனைத்து உத்தரவுகளும் வாபஸ்



  • திருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி



  • இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு



  • உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வாபஸ்: புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டு தேர்தல் நடத்தப்படும்... மாநில தேர்தல் ஆணையர் தகவல்



  • காற்றழுத்த தாழ்வு நிலை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 3 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தம்



  • ‘உள்ளாட்சி தேர்தல் வரும்.. ஆனா வராது..’ மோசடிகள் செய்யவே தேர்தலை பிரித்து, பிரித்து நடத்துகிறார்கள்...கே.பாலகிருஷ்ணன் தாக்கு



  • வீட்டை சுத்தம் செய்யும் போது விபரீதம்: ஷூவில் மறைந்திருந்த பாம்பு கடித்து பெண் பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com