இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

சென்னையில் ரூ.20 கோடி நிலத்தை அபகரித்து மோசடி காசா கிராண்டி உரிமையாளர் அனிரூத் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை

4/5/2017 5:08:19 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

சென்னை- சென்னையில் ரூ.20 கோடி நிலத்தை அபகரித்து மோசடி செய்ததாக காசா கிராண்டி உரிமையாளர் அனிரூத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னை செம்மஞ்சேரியை சேர்ந்தவர் குலசேகர். ரியல் எஸ்டேட் அதிபரான இவருக்கு பெருங்குடி திருவள்ளூர் சாலையில் ரூ.20 கோடி மத்திப்புள்ள நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்ய குலசேகர் முடிவு செய்தார். அதன்படி பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்டி நிறுவன உரிமையாளர் அனிரூத்(36) என்பவரை அணுகியுள்ளார். அதன்பின் இரண்டு பேரும் சேர்ந்து கட்டிடம் கட்டி விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளனர். பின்னர் அனிரூத், பெருங்குடி டவுன் பஞ்சாயத்தில் தனது பெயரில் அனுமதி ெபற்று கட்டிடம் கட்டியுள்ளார். ஒப்பந்தம்படி குலசேகருக்கு எந்த பங்கும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து குலசேகர் காசா கிராண்டி உரிமையாளர் அனிரூத்திடம் கேட்டுள்ளார். அப்போது இந்த இடம் எனது பெயரில் உள்ளது. நான் பெருங்குடி டவுன் பஞ்சாயத்தில் அனுமதி பெற்று கட்டி உள்ளேன். இதனால் உனக்கு பணம் கொடுக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த குலசேகர் பல முறை அனிரூத்திடம் நிலத்திற்கான பணம் ரூ.20 கோடியை கேட்டுள்ளார். அதற்கு உனக்கு பணம் கொடுக்க முடியாது மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்யக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து குலசேகர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில அபகரிப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குலசேகரின் ரூ.20 மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து காசா கிராண்டி கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அனிரூத் மீது ஐபிசி 465,468,471,420 கூட்டு சதி, மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இன்று காலையில் கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் அனிரூத்தை போலீசார் கைது செய்தனர். அவரை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மேலும் சில
  • வேறு ஒருவருடன் நெருக்கமாக இருந்ததால் ஆத்திரம் பெட்ரோல் ஊற்றி கள்ளக்காதலியை எரித்து கொன்று கள்ளக்காதலனும் தீக்குளித்து சாவு: கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை பயங்கரம்



  • கஞ்சா சப்ளை செய்த 8 பேர் கைது : 18 கிலோ, கார், பைக் பறிமுதல்



  • திருவாரூர் அருகே இன்று காலை பயங்கரம்: அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொலை



  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



  • கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது



  • உடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி



  • கயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல்: தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் அதிரடி கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com